Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


போதைப்பொருள் பயன்படுத்தியோருக்கு புனர்வாழ்வளிக்கும் சட்டத்தை ஆராய குழு நியமனம்

Go down

போதைப்பொருள் பயன்படுத்தியோருக்கு புனர்வாழ்வளிக்கும் சட்டத்தை ஆராய குழு நியமனம்  Empty போதைப்பொருள் பயன்படுத்தியோருக்கு புனர்வாழ்வளிக்கும் சட்டத்தை ஆராய குழு நியமனம்

Post by oviya Thu Mar 05, 2015 1:32 pm

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் தொடர்பான சட்டத்தை ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரரின் வேண்டுகோளின் பேரிலேயே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சரத் ஜயலால் இக்குழுவிற்கு தலைமை தாங்குவார் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய தனி நீதிமன்றம்

போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய தனி நீதிமன்றம் ஒன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

போதைப் பொருள் கடத்தல், பயன்பாடு, வர்த்தகம், கைவசம் வைத்திருத்தல், இவற்றுக்கு உதவிகளை வழங்குதல், நடவடிக்கை எடுக்கப்படாமை உள்ளிட்டவை தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்து விசாரணை நடத்த விசேட நீதிமன்றமொன்று அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விரைவில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

பாரியளவிலான போதைப் பொருள் தொடர்பிலான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும், ஏனைய வழக்குகளுடன் இந்த வழக்குகளை விசாரணை செய்வதனால் குற்றவாளிகளை தண்டிப்பது கால தாமதமாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum