Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சீனாவின் ஆதிக்கத்தை இல்லாதொழிக்கவே இலங்கை செல்கிறார் இந்திய பிரதமர்: ரொய்ட்டர்ஸ்

Go down

சீனாவின் ஆதிக்கத்தை இல்லாதொழிக்கவே இலங்கை செல்கிறார் இந்திய பிரதமர்: ரொய்ட்டர்ஸ் Empty சீனாவின் ஆதிக்கத்தை இல்லாதொழிக்கவே இலங்கை செல்கிறார் இந்திய பிரதமர்: ரொய்ட்டர்ஸ்

Post by oviya Thu Mar 05, 2015 1:31 pm

இலங்கையில் சீனா செலுத்திவரும் செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் என்பவற்றை குறைக்கும் நோக்கிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமரின் இவ்விஜயத்தின் போது இராணுவ உதவிகள் உள்ளிட்ட பலவகையான உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு இந்திய பிரதமர் ஒருவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா இந்த சிறிய தீவுகளில் துறைமுகங்கள், மின்நிலையங்கள், வீதிகளை அமைத்துள்ளதுடன் அதன் கடற்படையும் இந்து சமுத்திரத்திற்குள் தனது சுயலாபம் கருதி ஆழமாக ஊடுருவியுள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் இலங்கை துறைமுகத்திற்குள் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் நங்கூரமிட்டமை இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் தொடர்ந்தும் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா இந்த தீவுகளுடன் பாதுகாப்பு உறவுகளை நெருக்கமாக்குவதினால் அவற்றை தனது அரவணைப்பிற்குள் கொண்டு வர தீர்மானித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை தீவிரப்படுத்துவார் எனவும், திருகோணமலையில் ஏற்படுத்தப்படவுள்ள மின் நிலையத்திற்கான இறுதி அங்கீகாரத்தை வழங்குவார் எனவும் குறித்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கைக்கு வழங்கப்படும் இராணுவ பயிற்சியை மேலும் தரமுயர்த்துவது குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum