Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிழக்கில் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றது புதிய அத்தியாயம்- அமெரிக்க மற்றும் கிழக்கு ஊடகவியலாளர்களின் உறவை பலப்படுத்த கோரிக்கை

Go down

கிழக்கில் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றது புதிய அத்தியாயம்- அமெரிக்க மற்றும் கிழக்கு ஊடகவியலாளர்களின் உறவை பலப்படுத்த கோரிக்கை Empty கிழக்கில் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றது புதிய அத்தியாயம்- அமெரிக்க மற்றும் கிழக்கு ஊடகவியலாளர்களின் உறவை பலப்படுத்த கோரிக்கை

Post by oviya Thu Mar 05, 2015 1:18 pm

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றது தமிழர்களின் வரலாற்றில் புதிய அத்தியாயம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை வவுணதீவில் நடைபெற்ற கோட்டமட்ட விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனினும் அந்த அத்தியாயம் பல விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் இதனைப்பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொள்கையில் இருந்து சற்று பரிணமிக்கின்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாகவே அமைச்சர் என்ற நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் அதன் போது சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாணத்தின் தேவையின் அடிப்படையில் அதிகாரத்தினை பகிர்ந்துகொண்டு அவற்றினை மக்களுக்கு கொண்டுசெல்லும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



அமெரிக்க, இலங்கை ஊடகவியலாளர்களின் உறவை பலப்படுத்த கோரிக்கை

மட்டக்களப்பு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடகம் மற்றும் கல்விக்கான பணிப்பாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போது அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடக, கலாச்சார மற்றும் கல்வி அலுவல்கள் பணிப்பாளர் நிக்கோலி சூலீக் மற்றும் தூதுவராலயத்தின் தொடர்பாடல் உதவி இணைப்பாளர் ஒமர் இராஜரெட்ணம் ஆகியோர் ஊடகவியலாளர்களின் தேவைகள், பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தனர்.

இதன்போது அச்சு, இலத்திரனியல், ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன் அமெரிக்க நாட்டு ஊடகவியலாளர்களுக்கும் கிழக்கு ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான உறவினை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதற்கு பணிப்பாளர், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum