Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மோடியின் இலங்கை விஜயத்திற்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

Go down

மோடியின் இலங்கை விஜயத்திற்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்  Empty மோடியின் இலங்கை விஜயத்திற்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

Post by oviya Thu Mar 05, 2015 1:18 pm

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை இரத்து செய்ய வேண்டும் என கோரி சென்னையில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் 3 அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

இனப்படுகொலை நீதிக்கான போராட்டத்தில் ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கை தள்ளிப்போடப்பட்டுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் ஈழத் தமிழர்களின் நீதிக்காக குரல் எழுப்பாமல் இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவு பேணும் வகையில் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையிலேயே இலங்கை விஜயத்தை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி இளந்தமிழகம் இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் இயக்கம் ஆகியன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இந்திய அரசே! இலங்கையைப் புறக்கணித்திடுக! பிரதமர் மோடியே, இலங்கை பயணத்தை இரத்து செய்க!

இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலை என அங்கீகரித்து, வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை அங்கீகரித்து இந்திய நாடாளுமன்றத்திலும் ”இலங்கையில் நடப்பது தமிழினப்படுகொலை” என தீர்மானம் நிறைவேற்றுக!

ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் வலியுறுத்துக!

சர்வதேச அரங்கில் இலங்கையின் மதிப்பை உயர்த்தி நோக்கத்திலும் இலங்கையைப் பாதுகாக்கவும் எதிர்வரும் 13ம் திகதி தனது பிரதமரை இலங்கைக்கு சுற்றுலா பயணத்திற்கு இந்தியா அனுப்புகின்றது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார் என்பதைவிட அன்று போலவே இன்றும் சிங்களப் பேரினவாத அரசுடனான உறவை வலுப்படுத்தவே போகிறார் மோடி என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் பன்னாட்டு புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

7 கோடி தமிழர்களின் கோரிக்கையை காலில் போட்டு மிதித்துவிட்டு இலங்கையோடு கும்மாளம் போடும் இந்திய அரசை நாம் எச்சரிக்கின்றோம் என அவ் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கள பேரினவாத அரசை உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தனிமைப்படுத்த இலங்கையை புறக்கணிப்போம் என்பதே நமது முழக்கம். குறிப்பாக, இந்திய அரசு இலங்கையுடனான அரசியல் பொருளாதார பண்பாட்டு உறவுகளை துண்டித்து கொள்ள வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே இந்திய அரசின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கொழும்பு பொதுநலவாய மாநாட்டிற்கு செல்லக் கூடாதென போராட்டம் நடத்தப்பட்டமையால் அவரின் இலங்கை விஜயத்தை தடுக்க முடிந்தது.

ஆனால் இன்று இன்னும் வெளிப்படையாக இலங்கைக்கு ஆதரவளிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்வதை தடுக்க வேண்டிய தேவை முன்னிருந்ததை விட அதிகமாகவுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum