Top posting users this month
No user |
வடக்கின் பெரும் போர் ஆரம்பம்: யாழ் மத்திய கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி களத்தில்
Page 1 of 1
வடக்கின் பெரும் போர் ஆரம்பம்: யாழ் மத்திய கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி களத்தில்
'வடக்கின் பெரும் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 109 ஆவது போட்டி இன்று காலை ஆரம்பமானது.
வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியில் தற்போது யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அணித்தலைவர் நிரோஜன் முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்.
ஆட்டத்தை தொடங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரியினர் ஆரம்பத்தில் ஓட்டங்களை எடுக்கத் தடுமாறி வருகின்றனர். சற்று முன்னர் வரை 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்களை அந்த அணி பெற்றுள்ளது.
களத்தில் அணித்தலைவர் எஸ்.கபில்ராஜ் மற்றும் உப அணித்தலைவர் எம்.சிந்துராஜன் ஆகியோர் நிதானமான ஆட்டத்துடன் ஓட்டங்களை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியில் தற்போது யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அணித்தலைவர் நிரோஜன் முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்.
ஆட்டத்தை தொடங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரியினர் ஆரம்பத்தில் ஓட்டங்களை எடுக்கத் தடுமாறி வருகின்றனர். சற்று முன்னர் வரை 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்களை அந்த அணி பெற்றுள்ளது.
களத்தில் அணித்தலைவர் எஸ்.கபில்ராஜ் மற்றும் உப அணித்தலைவர் எம்.சிந்துராஜன் ஆகியோர் நிதானமான ஆட்டத்துடன் ஓட்டங்களை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum