Top posting users this month
No user |
நடிகை நயன்தாரா வீட்டுக்கு ஜப்தி நோட்டீஸ்: அதிகாரிகள் அதிரடி
Page 1 of 1
நடிகை நயன்தாரா வீட்டுக்கு ஜப்தி நோட்டீஸ்: அதிகாரிகள் அதிரடி
நீலகிரி மாவட்டத்தில் நடிகர் ஜெயராம், நடிகை நயன்தாரா பெயரில் உள்ள வீடுகளில் நகராட்சி வருவாய் அலுவலர்கள் 'ஜப்தி நோட்டீஸ்' ஒட்டியுள்ளனர்.
நீலகரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் சாலையில் 'ராயல் காஸ்டில்' என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 142 வீடுகள் உள்ளன.
நகராட்சி ஆனையர் சிவக்குமார் இதுபற்றி கூறுகையில், 'ராயல் காஸ்டில்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர் ஜெயராம், நடிகை நயன்தாரா மற்றும் பல தொழிலதிபர்களின் பெயரில் உள்ள வீடுகளுக்கு சொத்து வரி நிலுவையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சொத்து வரியை செலுத்த வலியுறுத்தி ஒட்டிய நோட்டீசை குடியிருப்பு பராமரிப்பாளர்கள் கிழித்து எறிந்ததால், நேற்று நகராட்சி வருவாய் அலுவலர் ஷாஜகான், உதவி வருவாய் அலுவலர் நந்தகுமார் மற்றும் அலுவலர்கள், சொத்துவரி செலுத்தாதவர்களின் வீடுகளில் 'ஜப்தி நோட்டீஸ்' ஒட்டினர்.
நகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், ஊட்டியில் வீடுகளை வாங்கியுள்ள சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பெரிய செல்வந்தர்கள் பலர், சொத்து வரி பாக்கி வைத்துள்ளனர்.
இதனால் நகராட்சி 100-சதவீத வரி வசூலை எட்ட முடியாத நிலை ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவர்கள் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் 'ஜப்தி' நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
நீலகரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் சாலையில் 'ராயல் காஸ்டில்' என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 142 வீடுகள் உள்ளன.
நகராட்சி ஆனையர் சிவக்குமார் இதுபற்றி கூறுகையில், 'ராயல் காஸ்டில்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர் ஜெயராம், நடிகை நயன்தாரா மற்றும் பல தொழிலதிபர்களின் பெயரில் உள்ள வீடுகளுக்கு சொத்து வரி நிலுவையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சொத்து வரியை செலுத்த வலியுறுத்தி ஒட்டிய நோட்டீசை குடியிருப்பு பராமரிப்பாளர்கள் கிழித்து எறிந்ததால், நேற்று நகராட்சி வருவாய் அலுவலர் ஷாஜகான், உதவி வருவாய் அலுவலர் நந்தகுமார் மற்றும் அலுவலர்கள், சொத்துவரி செலுத்தாதவர்களின் வீடுகளில் 'ஜப்தி நோட்டீஸ்' ஒட்டினர்.
நகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், ஊட்டியில் வீடுகளை வாங்கியுள்ள சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பெரிய செல்வந்தர்கள் பலர், சொத்து வரி பாக்கி வைத்துள்ளனர்.
இதனால் நகராட்சி 100-சதவீத வரி வசூலை எட்ட முடியாத நிலை ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவர்கள் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் 'ஜப்தி' நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum