Top posting users this month
No user |
Similar topics
அவனை தூக்கிலிடுங்கள்: டெல்லி மாணவியின் பெற்றோர் ஆவேசம்
Page 1 of 1
அவனை தூக்கிலிடுங்கள்: டெல்லி மாணவியின் பெற்றோர் ஆவேசம்
பலாத்காரத்தின்போது அமைதியாக இருந்திருந்தால் தாக்கியிருக்கமாட்டோம் என்று கைதி முகேஷ் சிங் கூறியதற்கு அந்த மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012-ல் ஓடும் பேருந்தில் நடந்த பலாத்காரத்தில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் இருக்கும் முகேஷ் சிங் என்பவரிடம், இந்த சம்பவத்தை மையப்படுத்தி இங்கிலாந்தின் லெஸ்லி உட்வின் என்பவர் ஆவணப்படம் தயாரித்துள்ளார்.
‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கைதான பேருந்து ஓட்டுனர் முகேஷ் சிங்கிடம் சிறையில் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் மகளிர் தினமான 8-ம் திகதி வெளியாகவுள்ள நிலையில், பலியான டெல்லி மாணவியின் பெற்றோருக்கு இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை பார்த்து திருப்தியடைந்த அவர்கள் இந்தப் படத்தை ஆதரிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், பலாத்காரத்தின்போது எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக இருந்திருந்தால் செத்திருக்கமாட்டாள் என்று பேசியுள்ள முகேஷ் சிங்கின் கருத்துக்கு அந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தாயார் கூறுகையில், இதைப்போன்ற ஒரு கருத்தை வெளியிடுவது என்பது குற்றவாளிக்கு ஒன்றும் பெரிய காரியமல்ல.
இதைப்போன்ற கருத்துகளை யாருக்கு எதிராக வேண்டுமானாலும் கொடுங்குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவர் கூறலாம்.
இரவு வேளைகளில் பெண்கள் வெளியே செல்ல கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களால்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன.
கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது என்று வாதிடுபவர்கள் அந்த வேதனை என்ன என்பது தெரியாதவர்களாக இருக்க வேண்டும்.
அவர்களை தூக்கிலிடவில்லை என்றால் அது பெண்களுக்கு துரதிர்ஷ்டவசமாக அமைந்து விடும்.
எல்லா கற்பழிப்பு குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் என நான் அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்த பெண்ணின் தந்தை கூறுகையில், இது எனது மகள் தொடர்பான விவகாரம் மட்டுமல்ல. இந்த கருத்தின் மூலம் முகேஷ் சிங் இந்த சமூகத்துக்கே கேள்வி எழுப்பியுள்ளதோடு, இந்த நாட்டின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தல் விடுத்துள்ளான்.
மேலும், நான் அரசை தொடர்பு கொண்டு அவனை தூக்கிலிடுமாறு கேட்டுக் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2012-ல் ஓடும் பேருந்தில் நடந்த பலாத்காரத்தில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் இருக்கும் முகேஷ் சிங் என்பவரிடம், இந்த சம்பவத்தை மையப்படுத்தி இங்கிலாந்தின் லெஸ்லி உட்வின் என்பவர் ஆவணப்படம் தயாரித்துள்ளார்.
‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கைதான பேருந்து ஓட்டுனர் முகேஷ் சிங்கிடம் சிறையில் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் மகளிர் தினமான 8-ம் திகதி வெளியாகவுள்ள நிலையில், பலியான டெல்லி மாணவியின் பெற்றோருக்கு இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை பார்த்து திருப்தியடைந்த அவர்கள் இந்தப் படத்தை ஆதரிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், பலாத்காரத்தின்போது எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக இருந்திருந்தால் செத்திருக்கமாட்டாள் என்று பேசியுள்ள முகேஷ் சிங்கின் கருத்துக்கு அந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தாயார் கூறுகையில், இதைப்போன்ற ஒரு கருத்தை வெளியிடுவது என்பது குற்றவாளிக்கு ஒன்றும் பெரிய காரியமல்ல.
இதைப்போன்ற கருத்துகளை யாருக்கு எதிராக வேண்டுமானாலும் கொடுங்குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவர் கூறலாம்.
இரவு வேளைகளில் பெண்கள் வெளியே செல்ல கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களால்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன.
கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது என்று வாதிடுபவர்கள் அந்த வேதனை என்ன என்பது தெரியாதவர்களாக இருக்க வேண்டும்.
அவர்களை தூக்கிலிடவில்லை என்றால் அது பெண்களுக்கு துரதிர்ஷ்டவசமாக அமைந்து விடும்.
எல்லா கற்பழிப்பு குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் என நான் அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்த பெண்ணின் தந்தை கூறுகையில், இது எனது மகள் தொடர்பான விவகாரம் மட்டுமல்ல. இந்த கருத்தின் மூலம் முகேஷ் சிங் இந்த சமூகத்துக்கே கேள்வி எழுப்பியுள்ளதோடு, இந்த நாட்டின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தல் விடுத்துள்ளான்.
மேலும், நான் அரசை தொடர்பு கொண்டு அவனை தூக்கிலிடுமாறு கேட்டுக் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் மோடி ஒரு கோழை மற்றும் சைக்கோ: டெல்லி முதல்வர் ஆவேசம்
» மாணவர்கள் முன்னிலையில் மாணவியின் முடியை அறுத்த ஆசிரியர்கள்
» சத்ய ஆவேசம்
» மாணவர்கள் முன்னிலையில் மாணவியின் முடியை அறுத்த ஆசிரியர்கள்
» சத்ய ஆவேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum