Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகளின் பெண் கடற்புலி தளபதிகளில் ஒருவர் மகளுடன் கைது.

Go down

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகளின் பெண் கடற்புலி தளபதிகளில் ஒருவர் மகளுடன் கைது. Empty கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகளின் பெண் கடற்புலி தளபதிகளில் ஒருவர் மகளுடன் கைது.

Post by oviya Tue Mar 03, 2015 1:23 pm

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் கடற்புலித் தளபதிகளில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முருகேசு பகீரதி என்ற பெண் புலிப் போராளியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், குறித்த பெண் புலி உறுப்பினரை கைது செய்துள்ளனர்.

பெண் உறுப்பினர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை சென்றிருந்த சிறுமியும் தாயும் திங்கட்கிழமை காலை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர்.

குறித்த பெண் பிரான்ஸிற்கு செல்ல முயற்சித்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

2ம் இணைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் அவரது 8 வயது மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் உள்ள தமது பெற்றோரை பார்க்கவென பிரான்ஸில் இருந்து வந்த ஜெயகணேஸ் பகீரதி என்ற பெண்ணும் அவரது 8 வயது மகளான ஜெயகணேஸ் பகலவி ஆகியோருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகீரதி என்ற பெண் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என்றும் அவர் பிரான்ஸில் திருமணம் முடித்த ஜெயகணேஸ் என்பவர் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பகிரதிக்கும் ஜெயகணேசிற்கும் இடையில் விவாகரத்து ஏற்பட்டு தற்போது பகிரதி தனது மகளுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும் மகளின் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள தனது பெற்றோரை பார்வையிட வந்து மீண்டும் பிரான்ஸ் செல்ல இருந்தபோதே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை கைது செய்யப்பட்ட பகிரதியும் பகலவியும் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum