Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதி, தமிழில் பேச வேண்டும் - தமிழ் மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை: மாவை

Go down

ஜனாதிபதி, தமிழில் பேச வேண்டும் - தமிழ் மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை: மாவை Empty ஜனாதிபதி, தமிழில் பேச வேண்டும் - தமிழ் மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை: மாவை

Post by oviya Tue Mar 03, 2015 1:19 pm

வடக்கில் மக்களின் காணிகளை விடுவித்து கடற்பகுதியை அபிவிருத்தி செய்து பலாலியில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பனவற்றை அபிவிருத்தி செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இன்று இடம்பெற்ற வடக்கு மாகாண ஒருங்கிணைப்பு கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையினை விடுத்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது பிரதேசம் நீண்ட கால போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைத்தையும் இழந்தவர்களாக உள்ளனர். அபிவிருத்தி செய்ய வேண்டிய பல தேவைகள் உள்ளன.

எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு அமைச்சரவையில் விசேட நிதி ஒதுக்கீடுகளை வட பகுதிக்கு ஏற்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் போரினால் விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இங்கு உள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்கு பட்டங்களைப் பெற்று பல ஆண்டுகளாகியும் வேலை வாய்ப்பு இன்றி இளைஞர், யுவதிகள் உள்ளனர். எனவே அவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேணடும்.

மேலும் தமிழர்களது நிலப்பரப்புக்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. எனவே அவற்றை விரைவில் விடுவித்து மக்களை மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ள வேண்டும்.

பலாலியில் விமான நிலையத்தினை அமைத்து ஏனைய நாடுகளுக்கு போக்குவரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

இந்த அபிவிருத்திகள் அனைத்தும் மக்களது நிலங்களை விடுத்து கடற்பகுதியை அபிவிருத்தி செய்து அவற்றில் அமைக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளுடன் பேசி பணத்தைப் பெற்று வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள அரசு ஆதரவு வழங்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி, தமிழில் பேச வேண்டும்

அநுராதபுரம், பொலநறுவை ஆகிய இடங்களில் நாங்கள் உரையாற்றும் போது சிங்களத்தில் உரையாற்றுவது போன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்தில் தமிழில் உரையாற்ற வேண்டும்.

நல்லிணக்கம் என்பது அதனூடாகவே ஏற்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum