Top posting users this month
No user |
விறகு சேகரிக்க சென்ற பெண் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்பு
Page 1 of 1
விறகு சேகரிக்க சென்ற பெண் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்பு
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை, லோயினோன் லின்போல்ட் தோட்டத்தில் விறகு சேகரிப்பதற்காக காட்டுக்குச் சென்ற பெண் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை 6 மணியளவில் குறித்த பெண், மற்றொரு பெண்ணுடன் விறகு சேகரிப்பதற்காக தோட்டத்திலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.காட்டுக்குள் வைத்து இருவரும் தனித்தனியே பிரிந்து சென்று விறகு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் வீட்டுக்கு திரும்புவதற்காக குறித்த பெண்ணை நீண்ட நேரம் தேடியும் அவரை காணாததையடுத்து தோட்டத்திலுள்ளவர்களிடம் மற்றப்பெண் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தோட்ட மக்கள் சென்று குறித்த பெண்ணை காட்டு பகுதியில் தேடிய போது, அவர் பிற்பகல் வேளையில் காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தோட்ட மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேற்படி பெண்ணின் முகப்பகுதியில் காயங்கள் காணப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனா். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று காலை 6 மணியளவில் குறித்த பெண், மற்றொரு பெண்ணுடன் விறகு சேகரிப்பதற்காக தோட்டத்திலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.காட்டுக்குள் வைத்து இருவரும் தனித்தனியே பிரிந்து சென்று விறகு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் வீட்டுக்கு திரும்புவதற்காக குறித்த பெண்ணை நீண்ட நேரம் தேடியும் அவரை காணாததையடுத்து தோட்டத்திலுள்ளவர்களிடம் மற்றப்பெண் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தோட்ட மக்கள் சென்று குறித்த பெண்ணை காட்டு பகுதியில் தேடிய போது, அவர் பிற்பகல் வேளையில் காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தோட்ட மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேற்படி பெண்ணின் முகப்பகுதியில் காயங்கள் காணப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனா். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum