Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்த அரசுக்கு சார்பான அதிகாரிகளால் ஊழல் மோசடி விசாரணைகள் ஆமை வேகத்தில்

Go down

மகிந்த அரசுக்கு சார்பான அதிகாரிகளால் ஊழல் மோசடி விசாரணைகள் ஆமை வேகத்தில் Empty மகிந்த அரசுக்கு சார்பான அதிகாரிகளால் ஊழல் மோசடி விசாரணைகள் ஆமை வேகத்தில்

Post by oviya Sat Feb 28, 2015 1:56 pm

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நடந்த பாரியளவிலான ஊழல், மோசடிகள், மனித கொலைகள் உட்பட பாரதூரமான குற்றச் செயல்கள் சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை உடனடியாக செயற்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்ட சில அதிகாரிகள் இந்த விசாரணை நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கோடிக்கணக்கான நிதி மோசடிகள் குறித்து பொலிஸ், இலஞ்ச ஆணைக்குழு மட்டுமல்லாது விசேட விசாரணைப் பிரிவுக்கும் ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது மாத்திரமல்லாது, கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்த மர்மக் கொலைகள், ஆட்கடத்தல், காணாமல் போக செய்தல் போன்ற குற்றங்கள் பற்றியும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனை தவிர ஹெரோயின் வியாபாரம், எத்னோல் இறக்குமதி ஆகியவற்றுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்ட அதிகாரிகள் விசாரணைகளில் விடயங்களில் சம்பந்தப்பட்டுள்ளதால், குற்றவாளிகளை சட்டத்தின்பிடிக்குள் கொண்டு வருவது தாமதமாகியுள்ளதாகவும் அந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum