Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மத்திய மாகாணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?

Go down

மத்திய மாகாணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? Empty மத்திய மாகாணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?

Post by oviya Thu Feb 26, 2015 1:27 pm

மத்திய மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மாகாணசபையின் தற்போதைய முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக 34 மாகாணசபை உறுப்பினர்கள் சத்திய பிரமாணத்தில் கையொப்பமிட்டு மத்திய மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளதாக அறிய முடிகின்றது.

58 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய மாகாணசபையில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக 16 உறுப்பினர்களும் முன்னைய ஆளுங்கட்சி சார்பாக 42 உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்த 42 உறுப்பினர்களில் 18 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் 16 உறுப்பினர்களுமாக 34 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பைச் சேர்ந்த திலின பண்டார தென்னக்கோனை முதலமைச்சராக நியமிக்குமாறு கோரி சத்திய பிரமாண கடிதமொன்றினை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தன்னை தொடர்ந்து முதலமைச்சராக தொடர்வதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்க வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து மத்திய மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.சதாசிவம் , சித்ராமன்திலக்க ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் 18 உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 உறுப்பினர்களாகியது.

அதே போல ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன் , சிங்.பொன்னையா , எம்.உதயகுமார் ,திருமதி .சரஸ்வதி சிவகுரு, ஆர். ராஜாராம், ஆர்.ஜீ. சமரநாயக்க ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர சுட்டமைப்பைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு மத்திய மாகாணசபையின் ஜனவரி மாதத்தில் இரண்டு மாகாணசபை அமர்வுகள் இடம் பெற்ற போதும் ஆட்சி மாற்றத்துக்குரிய எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

மேலும் மத்திய மாகாணசபையின் ஆளுநராக செயற்பட்டு வந்த டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய ஆளுநரா சுராங்கனி எல்லாவல நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பெப்ரவரி மாதத்தில் சபை அமர்வுகள் இடம்பெற வேண்டிய நாட்கள் விடுமுறைகள் என்பதால் சபை அமர்வுகள் இடம்பெறவில்லை. அடுத்த சபை அமர்வு மார்ச்சு மாதம் 3 ஆம் திகதி இடம் பெறவுள்ளது.

இந்தச்சபை அமர்வின் போது மத்திய மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்பது தொடர்பில் பலரினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum