Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் சவாலாக விளங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்

Go down

இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் சவாலாக விளங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் Empty இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் சவாலாக விளங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்

Post by oviya Thu Feb 26, 2015 1:21 pm

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் சவாலாக விளங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் எதிர்வரும் 2ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
ஆரம்ப தின நிகழ்வில் உரையாற்றவுள்ள மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல் ஹுசைன் இலங்கை விவகாரம் பற்றியும் சுருக்கமாக குறிப்பிடவுள்ளார்.

இலங்கை மீதான விசாரணை அறிக்கை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இதன்போது அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த அறிக்கையும் மார்ச் முதல் வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதில் உறுப்பு நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் பற்றியும், நாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நடவடடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.

மேற்படி வருடாந்த அறிக்கையில். இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பிலும் பதிவுகள் இடம்பெற்றிருக்கக்கூடும்.

குறிப்பாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் புதிய அரசு கொண்டுவரவுள்ள சட்டதிருத்தங்கள் தொடர்பில் ஆரப்படவுள்ளது.

இதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையும் 28வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு, குழுக்கள் அமைப்பு விடயமும் இடம்பெறவுள்ளது.

ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்களின் அறிக்கைகளும் பேரவையில் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

28வது தொடருக்கான நிகழ்ச்சி நிரழில் மார்ச் 25ம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் தற்போது அந்த விடயம் நீக்கப்பட்டுள்ளது.

28வது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கையின் மனித உரிமை விவகாரத்தை கோடிகாட்டி பேசுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கின்றன.

இலங்கை மீது தீர்மானம் நிறைவேறுவதற்கு இவ்விரு நாடுகளும் பிரதான பங்கை வகித்தன என்பதுடன், தற்போது அறிக்கை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னணியிலும் இவற்றின் பங்கு பெரிதும் இருப்பதாக பல்வேறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் சார்பில் இந்தக் கூட்டத்தொடருக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது.

அத்துடன். உப கூட்டங்களில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புகளும் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum