Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தனக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய ஷிராணி ஆட்சேபனை

Go down

தனக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய ஷிராணி ஆட்சேபனை Empty தனக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய ஷிராணி ஆட்சேபனை

Post by oviya Tue Feb 24, 2015 12:48 pm

தனக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கை நிறைவு செய்ய, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதம மெஜிஸ்ட்ரேட் கிஹான் பிலபிட்டியவுக்கு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகம் குறித்த வழக்கை நிறைவு செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.

எனினும் ஷிராணி பண்டாரநாயக்க சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நளின் லத்துவாஹெட்டி, மத்திய வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் சில அதிகாரிகளின் உடந்தையிலேயே இவ்வழக்கு சோடிக்கப்பட்டிருந்ததாகவும், அவரின் வங்கிக் கணக்கில் அவரது அனுமதியின்றி சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதுமாத்திரமல்லாது இந்த நடவடிக்கைக்கு உடந்தையான குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்தாத வரையில் இந்த வழக்கை நிறைவு செய்ய அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum