Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காதலை எதிர்த்து அவசர திருமணம்: காதலனோடு விஷம் அருந்திய காதலி

Go down

காதலை எதிர்த்து அவசர திருமணம்: காதலனோடு விஷம் அருந்திய காதலி Empty காதலை எதிர்த்து அவசர திருமணம்: காதலனோடு விஷம் அருந்திய காதலி

Post by oviya Mon Feb 23, 2015 12:18 pm

கோவையில் இளம்பெண் ஒருவரின் காதலை எதிர்த்து அவரது பெற்றோர் அவசர திருமண ஏற்பாடு செய்ததால் அந்த பெண் காதலனோடு சேர்ந்து விஷம் குடித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள வரதராஜபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரது மகள் சரஸ்வதிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அவர்களது உறவினர் வகையில் சென்னையை சேர்ந்த அசோக் என்ற வாலிபரை மாப்பிள்ளையாக தெரிவு செய்துள்ளனர்.

திருமணத்துக்காக நேற்று பெண் வீட்டார் சென்னை புறப்பட தயாரான போது அலங்காரம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவர் மாயமானதை அறிந்த அனைவரும் அனைத்து இடங்களிலும் தேடியும் எந்த தகவல் கிடைக்கவில்லை. எனவே அவரது பெற்றோர் சிங்காநல்லூர் பொலிசாரிடம் புகார் செய்தனர்.

பின்னர் விசாரணையில், கோவை ரேஸ்கோர் நடைபாதையில் வாலிபரும், இளம்பெண்ணும் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற பொலிசார், அங்கு விஷம் குடித்து சிகிச்சை பெறுவது மாயமான புதுப்பெண் சரஸ்வதி என்பதும், அந்த வாலிபர் அவரது காதலர் கார்த்தி என்பதையும் அறிந்தனர்.

பொலிசாரிடம் சங்கீதா கூறுகையில், நான் சிங்காநல்லூரை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபரை கடந்த சில மாதமாக காதலித்து வந்தேன்.

என் காதல் எனது வீட்டாருக்கு தெரிந்ததும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவசர அவசரமாக எனக்கு உறவுமுறையில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

காதலனை மறக்க முடியாமல் இருந்த நான் நேற்று வீட்டில் இருந்து வெளியேறி எனது காதலனுக்கு தகவல் தெரிவித்தேன்.

நாங்கள் எங்காவது சென்று புதிதாக வாழ்க்கை தொடங்க முடிவு செய்தபோது பொலிசாரும், பெற்றோரும் எங்களை தேடுவதை அறிந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம்.

எனவே நாங்கள் இருவரும் சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோம்.

பின்னர் உயிருக்கு போராடிய எங்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் என்று தெரிவித்துள்ளார்.

இதையறிந்த மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்ததோடு, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் திருமணம் நின்று விட்டதாக அறிவித்தனர். இதனால் திருமணத்துக்கு சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum