Top posting users this month
No user |
ஆட்கடத்தலில் ஈடுபட்ட கடற்படை உயர் அதிகாரி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி: சிங்கள ஊடகம்
Page 1 of 1
ஆட்கடத்தலில் ஈடுபட்ட கடற்படை உயர் அதிகாரி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி: சிங்கள ஊடகம்
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக இலங்கையர்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கடற்படை உயர் அதிகாரியொருவர் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது.
சில கடற்படை உத்தியோகஸ்த்தர்களுடன் இணைந்தே குறித்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சிலாபம், நீர்கொழும்பு, ஹம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட கடற்பரப்புக்களின் ஊடாக படகு மூலம் ஆட்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் திட்டமிட்ட முறையில் இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விடுமுறை பெற்றுச் செல்வதனைப் போன்று அவுஸ்திரேலியாவிற்கு குடும்பத்துடன் சென்று அங்கிருந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைக்க குறித்த அதிகாரி திட்டமிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
கடற்படை தளபதியிடம் இதற்கான அனுமதியையும் குறித்த அதிகாரி கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில கடற்படை உத்தியோகஸ்த்தர்களுடன் இணைந்தே குறித்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சிலாபம், நீர்கொழும்பு, ஹம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட கடற்பரப்புக்களின் ஊடாக படகு மூலம் ஆட்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் திட்டமிட்ட முறையில் இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விடுமுறை பெற்றுச் செல்வதனைப் போன்று அவுஸ்திரேலியாவிற்கு குடும்பத்துடன் சென்று அங்கிருந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைக்க குறித்த அதிகாரி திட்டமிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
கடற்படை தளபதியிடம் இதற்கான அனுமதியையும் குறித்த அதிகாரி கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum