Top posting users this month
No user |
கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல்வீச்சு
Page 1 of 1
கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல்வீச்சு
மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் மீது ஆராச்சிக்கட்டுவ பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார் என சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 அளவில் இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முறைபாடு கிடைக்கப்பெற்றுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தாக்குதலில் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு அருகில் இருந்த சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பஸ் சாரதி சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தாக்குதலில் பஸ்ஸின் முன் கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் தனியார் பஸ்கள் மீது இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை 1.30 அளவில் இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முறைபாடு கிடைக்கப்பெற்றுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தாக்குதலில் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு அருகில் இருந்த சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பஸ் சாரதி சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தாக்குதலில் பஸ்ஸின் முன் கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் தனியார் பஸ்கள் மீது இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum