Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் ஜே.வி.பி

Go down

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் ஜே.வி.பி Empty அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் ஜே.வி.பி

Post by oviya Fri Feb 20, 2015 1:18 pm

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தாமதமாகியுள்ளதாகவும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த 50 நாட்களில் முறைப்பாடுகள் சம்பந்தமாக நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைய முடியாது எனவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊழல், மோசடிகள் குறித்து விசாரிப்பதை அரசாங்கம் தாமதித்து வருகிறது. ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தது.

முன்னைய ஆட்சியின் கீழ் ராஜபக்ச குடும்பம் அவர்களை சுற்றியிருந்த நபர்கள் குழு அரச வளங்களையும் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஜே.வி.பி அந்த ஊழல் மோசடிகளை விமர்சித்தது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தும் ஜனவரி 13 ஆம் திகதி ராஜபக்ச ஆட்சியின் ஊழல், மோசடிகள் தொடர்பாக நாங்கள் ஆவணங்களுடன் சாட்சியங்களை முறைப்பாடுகளை முன்வைத்தோம்.

மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சஜின்வாஸ் குணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக நாங்கள் முறைப்பாடுகளை செய்தோம்.

விசாரணை நடத்துவோர் எம்மிடம் கருத்துக்களை கேட்ட போதும் மறுத்தரப்பினரிடம் எந்த விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை. சிலர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகளை செய்தனர்.

100 நாட்களில் தற்போது 50 நாட்கள் நெருங்க போகிறது. எனினும் சம்பந்தப்பட்ட விசாரணைகள் இன்னும் நடத்தப்படவில்லை. யோஷித்த ராஜபக்ச, கடற்படையில் ஏனைய அதிகாரிகளுக்கு கிடைக்காத சிறப்புரிமைகளை அனுபவித்தார்.

தேர்தல் முடிவடைந்ததும் ஜனவரி 9 ஆம் திகதி காலையில் யோஷித்தவை கடற்படையில் இருந்து விலக்கிக்கொள்ளும் கடிதம் கையளிக்கப்பட்டது. கடற்படை யோஷித்தவுக்கு மூன்று மாத கால விடுமுறைக்கு அனுமதி வழங்குகிறது.

ஏனைய கடற்படையினருக்கு கிடைக்காத சிறப்புரிமைகள் அவருக்கு எப்படி கிடைக்கின்றது என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி ஜே.வி.பி. பாதுகாப்புச் செயலாளரிடம் முறைப்பாடு செய்தது.

குழுக்களை நியமித்து விசாரணை நடத்துவதாக கூறினார்கள். அது குறித்து விசாரணை நடத்த குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யோஷித்த பேபி வெளிநாடு செல்கிறார்.

அவர் நாட்டில் இருந்து செல்ல யார் இடமளித்தது. ஒரு நாள் கூட அந்த விசாரணைக்குழு யோஷித்தவை விசாரணைக்கு அழைக்கவில்லை எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum