Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உடல் நலம் சரியில்லையா? கெஜ்ரிவாலுக்கு மோடி அட்வைஸ்

Go down

உடல் நலம் சரியில்லையா? கெஜ்ரிவாலுக்கு மோடி அட்வைஸ் Empty உடல் நலம் சரியில்லையா? கெஜ்ரிவாலுக்கு மோடி அட்வைஸ்

Post by oviya Thu Feb 19, 2015 1:57 pm

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலம் குறித்து மிகுந்த அக்கறையுடன் நலம் விசாரித்துள்ளார் நரேந்திர மோடி.
டெல்லி மாநகர பொலிஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி, தன் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், டெல்லி கவர்னர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என மிக முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஏற்கனவே வந்து சோபாவில் அமர்ந்து இருந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வந்து சேர்ந்தார்.

தன் மனைவி சுனிதா மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரோடு ஒரே காரில் வந்திறங்கிய கெஜ்ரிவால், பிரதமரின் சோபாவிற்கு பின்பக்கமாக நடந்து சென்று அதே சோபாவின் மற்றொரு ஓரத்தில் அமர்ந்தார்.

நடுவில் ராஜ்நாத் சிங் இருக்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு வணக்கம் தெரிவிக்கவே மூவரும், ஒரே சோபாவில் அமர்ந்தபடி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

சில நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை அடுத்து, அந்த விருந்து நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த கவனமே இவர்களது பேச்சின் மீது திரும்பியது.

மேலும் பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக நின்ற கிரண் பேடி, தன் இருக்கையை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அருகில் இழுத்துப்போட்டு உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்.

நிகழ்ச்சி முடிந்த பின் பிரதமருடன் பேசிய விடயம் குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் கூறியதாவது, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒருவரையொருவர் நலம் விசாரித்தது ஆரோக்கியமான விடயம்.

நிகழ்ச்சியில் அனைவருமே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்தனர்.

கெஜ்ரிவாலுக்கு, நெஞ்சு சளி பிரச்சனை உள்ளது. இதனால் ஏற்படும் சுவாசப் பிரச்னையால் இருமலும் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த பிரச்சனையால் அவர் அவதிப்படுகிறார்.

இந்த சந்திப்பின்போது கெஜ்ரிவாலின் உடல்நலத்தை அக்கறையுடன் விசாரித்த, பிரதமர் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் நகேந்திரா என்பவர் இந்த பிரச்னையை குணமாக்குவதில் தலைசிறந்தவர் என்றும் அவரிடம் காட்டுங்கள் எனவும் கூறினார்.

அதற்கு, கெஜ்ரிவாலும் சம்மதம் தெரிவித்தார் என கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum