Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குமார் குணரத்னத்தின் மனு நிராகரிப்பு - நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி

Go down

குமார் குணரத்னத்தின் மனு நிராகரிப்பு - நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி Empty குமார் குணரத்னத்தின் மனு நிராகரிப்பு - நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி

Post by oviya Wed Feb 18, 2015 1:33 pm

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தன்னை கைது செய்து நாடு கடத்துவதை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி குமார் குணரத்னம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.

எப்படியிருப்பினும் இந்த மனு முன்னர் விசாரணைக்கு வந்தபோது குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் இன்று குறித்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது போதிய ஆதாரங்கள் இல்லாததால் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், பிரியதாச மற்றும் வனசுந்தர போன்ற மூவராலும் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குமார் குணரத்னம் சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு வந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குமார் குணரட்னத்தை நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னத்தை நாட்டில் இருந்து வெளியேற்றுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி அந்த கட்சி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை மீண்டும் இன்று ஆராய்ந்த உயர்நீதிமன்றம், அம்மனுவை நிராகரித்ததுடன், அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற முடியும் என அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், பியசாத் டெப், ஈவா வனசுந்தர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்டதுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குமார் குணரட்னத்தை அரசியல் காரணங்களின் அடிப்படையில் நாட்டில் இருந்து வெளியேற்றப் போவதாக கூறி, முன்னிலை சோசலிசக் கட்சி அண்மையில் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது.

இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் குமார் குணரட்னத்தை கடந்த 13ம் திகதி வரை நாட்டில் இருந்த வெளியேற்ற வேண்டாம் என குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பட்டாளருக்கு உத்தரவிட்டது.

இதனைடுத்து அந்த மனுவை ஆராய்ந்து நீதிமன்றம் இன்று வரை குமார் குணரட்னத்திற்கு எதிராக இன்று வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.

ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்று குழுவினர் ஆரம்பித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் குமார் குணரட்னம், இலங்கை பிரஜை அல்ல எனவும், அவர் இலங்கையில் தங்கியிருப்பது சட்டவிரோதமானது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வீரா தயாரத்ன கடந்த 13ம் திகதி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

குமார் குணரட்னம், அவுஸ்திரேலியாவில் சுற்றுலா விசா அனுமதியில் இலங்கை வந்துள்ளார் எனவும் அவரது விசா அனுமதி காலம் கடந்த ஜனவரி 31ம் திகதியுடன் முடிவடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அவர் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் இல்லை என்றால், கைது செய்து நாடு கடத்த வேண்டும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மனுவை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் குமார் குணரட்னத்தை நாட்டில் இருந்து வெளியேற்ற குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum