Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மாற்றம் அமைப்பின் நிகழ்ச்சியில் வடமாகாண அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள்: விக்னேஸ்வரன் அறிவிப்பு

Go down

மாற்றம் அமைப்பின் நிகழ்ச்சியில் வடமாகாண அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள்: விக்னேஸ்வரன் அறிவிப்பு Empty மாற்றம் அமைப்பின் நிகழ்ச்சியில் வடமாகாண அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள்: விக்னேஸ்வரன் அறிவிப்பு

Post by oviya Wed Feb 18, 2015 1:32 pm

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் மாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக சேஞ்ச் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் என முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் சேஞ்ச் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜியாஉல் ஹசன் ரவூப் என்பவருக்கு கடிதமூலம் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி சேஞ்ச் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மீன்பிடி அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோரும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சேஞ்ச் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் காலை அமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்திலும் மாலை அமர்வு மத்திய, மாகாண அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடலாக அமைச்சு ரீதியாக வௌ;வேறு இடங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இவ்வாறு அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தமைக்குக் கல்விச் சமூகம் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் வடமாகாண அமைச்சர்கள் தரப்பிலும் தங்களுடன் இவ்வாறான ஒரு நிகழ்ச்சி தொடர்பாக எவ்விதமான கலந்தாய்வும் இல்லாமலேயே அழைப்பிதழில் பெயர்கள் போடப்பட்டிருப்பதாகவும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக வடக்கு முதல்வர் சேஞ்ச் அமைப்பின் பொதுச் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில், இக்கூட்டத்துக்கான திகதி எங்கள் அமைச்சர்களின் ஒப்புதலோ கலந்துரையாடலோ இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதனைக் காணுகிறேன்.

இக்கூட்டத்தில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கத்தின் அமைச்சர்களும் அல்லது பொருத்தமான அலுவலர்களும் ஆரம்பத்திலேயே இதன் நோக்கம் மற்றும் இது எந்தவிதத்தில் வடமாகாண மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதனைக் கலந்துரையாடாமல் என்னையும் எனது அமைச்சர்களையும் கூட்டத்துக்கு அழைப்பது பொருத்தமற்றது.

இது சம்பந்தமாக நீங்கள் மத்திய அரசாங்க கௌரவ அமைச்சர்களுக்கு என்ன கருத்தை கூறியிருக்கின்றீர்கள் என்பது தெரியவில்லை. எங்கள் கௌரவ அமைச்சர்கள் எவரும் இக்கூட்டத்தில் பங்குபற்றமாட்டார்கள் என்பதைக் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum