Top posting users this month
No user |
கைதிகள் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
கைதிகள் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
வெலிக்கடையில் 2012ம் ஆண்டு இடம்பெற்ற கைதிகள் படுகொலைக்கு எதிராக வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கைதிகள் படுகொலைக்கு எதிரான மக்கள் ஒன்றியம் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததுடன், கைதிகளை கொலை செய்தோரை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம்
அதிரடிப்படையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு சென்று ஏற்படுத்திக்கொண்ட மோதலை அடுத்து நடு இரவில் கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறையில் கொல்லப்பட்ட கைதிகளின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இ்நத ஆர்ப்பாட்டம் சிறைச்சாலைக்கு எதிரில் நடைபெற்றது.
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர்இ இந்த கொலைகளுடன் தொடர்புடைய கொலையாளிகள் பெயர் விபரங்கள் உட்பட நேரில் கண்ட சாட்சியங்களுடன் தகவல்களை வழங்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெலிகடையில் 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அதிரடிப்படையினரின் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
கைதிகள் படுகொலைக்கு எதிரான மக்கள் ஒன்றியம் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததுடன், கைதிகளை கொலை செய்தோரை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம்
அதிரடிப்படையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு சென்று ஏற்படுத்திக்கொண்ட மோதலை அடுத்து நடு இரவில் கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறையில் கொல்லப்பட்ட கைதிகளின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இ்நத ஆர்ப்பாட்டம் சிறைச்சாலைக்கு எதிரில் நடைபெற்றது.
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர்இ இந்த கொலைகளுடன் தொடர்புடைய கொலையாளிகள் பெயர் விபரங்கள் உட்பட நேரில் கண்ட சாட்சியங்களுடன் தகவல்களை வழங்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெலிகடையில் 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அதிரடிப்படையினரின் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum