Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நிலம் இல்லாவிடில் நஞ்சு தாருங்கள் சம்பூர் மக்கள்

Go down

நிலம் இல்லாவிடில் நஞ்சு தாருங்கள் சம்பூர் மக்கள் Empty நிலம் இல்லாவிடில் நஞ்சு தாருங்கள் சம்பூர் மக்கள்

Post by oviya Tue Feb 17, 2015 12:35 pm

எமது நிலத்தை எம்மிடம் தாருங்கள் எனும் கோரிக்கையை முன்வைத்து சம்பூர் மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் கிளிவெட்டி நலன்புரி முகாமிற்கு முன்பாக நேற்று இடம்பெற்றுள்ளது.

யுத்தம் நிலவிய போது 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து கிளிவெட்டி, மணற்சேனை, பட்டித்திடல், கட்டைபறிச்சான் உள்ளிட்ட நலன்புரி முகாம்களில் இம்மக்கள் தங்கியுள்ளனர்.

இதுவரையிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மூதூர் கிழக்கு சம்பூர் மக்கள் தங்களை சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியமர்த்துமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்துடன் தமது நிலத்தை தம்மிடமிருந்து பறிக்க காரணமாகவிருந்த அனல்மின்சார நிலைய வேலைகளை தடை செய்யுமாறும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசே தங்களை சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்று, எங்களுக்கு சொந்த மண் வேண்டும், சம்பூர் அணல் மின்சார நிலைய வேலைகளை ஆரம்பிக்காதே, காணாமல் போன எங்கள் பிள்ளைகள் எங்கே, போன்ற பதாதைகளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்.

தமது நிலத்தை விட்டு வாழ முடியாது எனத் தெரிவித்த மக்கள் தம்மை இனியும் இவ்வாறு துன்புறுத்தாமல் மீள்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

எங்களது நிலத்தை தராவிட்டால் ஒரு குப்பி நஞ்சு தாருங்கள் என கண்ணீர் விட்டு கதறியபடி சம்பூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 9 வருடங்களாக மூதூர் முகாம்களில் வசிக்கும் சம்பூர் மக்கள் அடிப்படை வசதிகளின்றி பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum