Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மோடியுடன் மைத்திரி சந்திப்பு: இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது

Go down

மோடியுடன் மைத்திரி சந்திப்பு: இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது Empty மோடியுடன் மைத்திரி சந்திப்பு: இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது

Post by oviya Mon Feb 16, 2015 12:58 pm

நான்கு நாள் உத்தியோக பூர்வமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜனாதிபதி மைத்திரிபால இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அதற்கு முன்னதாக அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு அளித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி சிறிசேன ஏற்றுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அணு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், மோடியும், சிறிசேனவும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "இந்தியாவுக்கும் - இலங்கைக்குகும் இடையே வலுவான பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகவே ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் எனது முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவை நோக்கி அமைந்தது.

இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பெறும். பல்வேறு ஒப்பந்தங்களில் இன்று இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியப் பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர், எங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும்" என்றார்.

முன்னதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா - இலங்கை நட்புறவு புதிய பரிமாணங்களை எட்டும் தருணம் வந்துவிட்டது. இலங்கை ஜனாதிபதி சிறிசேனா என்னை அவர்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். நிச்சயமாக வரும் மார்ச் மாதம் அவர்கள் நாட்டுக்குச் செல்வேன்.

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நானும், சிறிசேனாவும் முனைப்புடன் இருக்கிறோம். இந்தியா - இலங்கை பரஸ்பரம் நம்பிக்கைக்கு, இப்போது கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒரு சான்றாகும்.

விரைவில், இந்தியா - இலங்கை வர்த்தக செயலர்கள் அளவிளான சந்திப்பு நடைபெறும். மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விரிவாக ஆலோசித்தோம்" என்றார்.

இதேவேளை, நாளை 17ம் திகதி பிஹாரில் உள்ள புத்த கயாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார். அங்கிருந்து திருப்பதி செல்லும் அவர் ஏழுமலையானை வழிபடுகிறார். புதன்கிழமை காலை திருப்பதியில் இருந்து கொழும்பு புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum