Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மைத்திரி ஆட்சியிலும் இந்து ஆலயங்கள் உடைப்பு தொடர்கின்றது: கலையரசன் விசனம்

Go down

மைத்திரி ஆட்சியிலும் இந்து ஆலயங்கள் உடைப்பு தொடர்கின்றது: கலையரசன் விசனம் Empty மைத்திரி ஆட்சியிலும் இந்து ஆலயங்கள் உடைப்பு தொடர்கின்றது: கலையரசன் விசனம்

Post by oviya Sat Feb 14, 2015 12:43 pm

சேனைக்குடியிருப்பில் உள்ள காமாச்சி அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஆலய நிருவாகத்தினர் கல்முனை பொலிசில் முறைப்பாடொன்றினை பதிவுசெய்துள்ளனர் என ஆலய செயலாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்துக்கூறுகையில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை மாலை அம்மனுக்கு பூசை வழிபாடுகளை நடத்திவிட்டு ஆலயத்தினை ஆலய பிரதம குரு பூட்டிவிட்டு சென்றதாகவும் பின்னர் காலையில் ஆலய கதவு அனைத்தும் உடைக்கப்பட்டு அம்மனுக்கு போடப்பட்டிருந்த மாலையும் சிறிய காப்பு அணிகலன்களும் உண்டியலும் களவாடப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக பொலிசில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

ஆலயத்தில் நிகழ்ந்த களவு தொடர்பான செய்தியை கேள்வியுற்ற கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் இவ்விடத்திற்கு விரைந்து அனைத்தையும் பார்வையிட்டதுடன் தனது கருத்தையும் தெரிவித்தார்.

இவர் அங்கு கருத்துரைக்கையில் இந்தநாட்டிலே மிகவும் மோசமான செயற்பாடாக இருந்து வரும் ஒரு செயற்பாடு. ஆலயங்ளை உடைத்து அதற்கு சேதங்களை விளைவித்து இனமுறுகல்களை ஏற்படுத்துவதற்கு செய்யும் நடவடிக்கையாகவே இதனை பார்க்கவேண்டி இருக்கின்றது.

மகிந்த அரசாங்கத்தில்தான் ஆலயங்கள் உடைக்கப்பட்டன என்று பார்த்தால் தற்போது புதிதாக பதவியேற்றிருக்கும் மைத்திரி அரசாங்கத்திலும் இச்செயற்பாடு தொடர்ந்து செல்வது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

இந்தச்செயல்களை செய்பவர்கள் யார் என்பதனை உரியவர்கள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தண்டனைகளை பெற்றுக்கொடுக்கும் வரை இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் எனவே பொலிசார் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு உரியர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டியது அவர்களது கடமையாகும்.

சட்டம் இதனை கண்டும் காணாமலும் விடுவோமாக இருந்தால் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையே பாரிய இனவிரிசலை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum