Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மலையக மக்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்கியுள்ளது: ஸ்ரீதரன்- தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: கணபதி கனகராஜ்

Go down

மலையக மக்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்கியுள்ளது: ஸ்ரீதரன்- தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: கணபதி கனகராஜ் Empty மலையக மக்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்கியுள்ளது: ஸ்ரீதரன்- தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: கணபதி கனகராஜ்

Post by oviya Sun Feb 08, 2015 11:08 am

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களின் மத்தியில் ஒற்றுமை மேலோங்கி வருகின்றது. இதனை மேலும் வலுப்படுத்துவதற்கு தோட்டக்கோவில் நிருவாகங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
புசல்லாவை ரொச்சைல்ட் ஜி.எல் தோட்டப்பிரிவில் இராமர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் புசல்லாவை அமைப்பாளர் சண்முகராஜ் ,இறம்பொடை அமைப்பாளர் அந்தனிராஜ் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாக்களித்ததன் பயனாக இன்று நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளது.

நல்லவர்கள் யார், கள்வர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் தற்போது அறிந்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் மத்தியில் கடந்த காலங்களைவிட ஒற்றுமை நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த ஒற்றுமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அனைவரும் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும். தோட்டங்களில் ஆலயங்கள் கட்டப்படுவது இன்றியமையாததாகும். ஆலய வழிபாடுகள் மூலம் ஆன்மீகத்தினையும் நல்லொழுக்கத்தினையும் ஏற்படுத்த முடியும்.

அந்த வகையில் இராம் படை எனும் இறம்பொடை என்றும் சொல்லப்படுகின்ற இந்தப்பிரதேசத்தில் இராமர் ஆலயமொன்று அமைக்கப்படுவது வரவேற்கத்தக்க விடயமாகும். அத்துடன் இந்தப்பிரதேசத்தில் ஆஞ்சநேயர் ஆலயமொன்றும் உள்ளமை சிறப்பம்சமாகும்.

எனவே இந்த ஆலய நிர்மாணப்பணிக்கு தொழிலாளர் தேசிய சங்கம் நிச்சயமாக நன்கொடைகளை நல்கும். தலைவரும் அமைச்சருமான திகாம்பரத்தின் தலைமையில் மலையகத்தில் இனிவரும் காலங்களில் நல்ல பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

தேயிலைக்கு விதிக்கும் ஏற்றுமதி வரியை நீக்கி தோட்ட தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: கணபதி கனகராஜ்

ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் ஏற்றுமதி வரியை நீக்கி அந்த வருமானத்தை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதிகரிக்கப்படும் சம்பளத்தோடு சேர்த்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கச்செய்யும் முதலாளிமார் சம்மேளனத்துடன் தோட்டத்துறை சார் தொழிற்சங்கங்கள் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் மார்ச் முப்பத்தோராம் திகதியுடன் முடிவடைவதால், புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு முன்னோடியாக மக்களுக்கு சலுகைகளை வழங்க சமர்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமாக பேசப்படவேயில்லை. வழமையாகவே தோட்டத் தொழிலாளர்களின் வறுமையைப் பற்றி பேசுகின்ற அரச துறையினர் அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டிய தருணங்களில் அவர்களை மறந்துவிடுவது வழமையான நிகழ்வாகும்.

இலங்கை தொழிலார் காங்கிரஸ் மலையகத்தின் எல்லா பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலமும், போராட்டங்களின் மூலமுமே தீர்த்து வைத்து வந்துள்ளது. அதே போல எதிர்வரும் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் சமர்பித்த இடைக்கால வரவு செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அறிவித்துள்ளது. டிசல் ,மண்ணென்ணெய் பெற்றோல மற்றும் எரிவாயு ஆகியவற்றின் வரிகளை அகற்றி மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பள அதிகரிப்பை சிபார்சு செய்துள்ளது. இத்துடன் ஒய்வூதியம் பெருபவர்களும் நன்மையடைந்துள்ளனர். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் தொடர்பில் எவ்வித முன்மொழிவும் இடம்பெற்றிருக்கவில்லை.

அரசாங்கம் தேயிலை ஏற்றுமதியின் மூலம் பெற்றுக்கொள்ளும் பெருமளவு வரிவருமானத்தை தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணமாக வழங்க முடியும். கூட்டு ஒப்ந்தத்தின் மூலம் அதிகரிக்கப்படவுள்ள சம்பள அதிகரிப்புடன் இந்த வரி நிவாரணத்தையும் சேர்த்து வழங்கி தோட்டத் தொழிலாளரின் சம்பளத்திற்கு அரசாங்கம் பங்களிக்க வேண்டும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தலின் பின் மலையகத்தில் அராஜகம் புரிய நினைத்தவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது: ம.மா.உ.எஸ்.ஸ்ரீதரன்- ஆசிரியர் நியமனங்கள், 16 ஆயிரம் கொடுப்பணவு: கணபதி கனகராஜ் வலியுறுத்து
» திகாவுக்கு சவால் விடுத்த கணபதி கனகராஜ்
» பொது தேர்தலில் மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கி எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும்: யோகேஸ்வரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum