Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விமான நிலையத்தில் அரை நிர்வாணமாய் ஓட்டமெடுத்த நபர்: காரணம் என்ன?

Go down

விமான நிலையத்தில் அரை நிர்வாணமாய் ஓட்டமெடுத்த நபர்: காரணம் என்ன? Empty விமான நிலையத்தில் அரை நிர்வாணமாய் ஓட்டமெடுத்த நபர்: காரணம் என்ன?

Post by oviya Sat Feb 07, 2015 12:15 pm

சென்னை விமான நிலையத்தில் நபர் ஒருவர் அரை நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று காலை அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த, ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகர்(27) என்பவர் குடியுரிமை, சுங்கம் ஆகிய சோதனைகளை முடித்துக் கொண்டு வெளியே வரும் வழியில் திடீரென தரையில் அமர்ந்து கொண்டார்.

மேலும் எனக்கு தரவேண்டிய பணத்தை கொடுத்தால் தான் இங்கிருந்து போவேன் என அவர் கூச்சலிட்டுள்ளார்.

இதனைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவரது அருகில் சென்ற போது, பிரபாகர் திடீரென தனது சட்டை, பேண்ட்டை கழற்றிவிட்டு அரை நிர்வாணமாக ஓடத் தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலையத்திற்குள் சுற்றி ஓடிய பிரபாகரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து உடைகளை அணியச் செய்தனர்.

அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே விமான நிலைய மருத்துவ குழுவினர் சோதனை நடத்திய பின்னர், இதுபற்றி விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகரின் உறவினர் யாராவது வந்திருந்தால் விமான நிலைய மேலாளர் அறைக்கு வரவும் என்று மைக்கில் அறிவிக்கப்பட்டது.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் சென்று, பிரபாகர் எனது தம்பி, அபுதாபிக்கு கட்டிட வேலைக்காக 2 ஆண்டுகளுக்கு முன் சென்ற அவருக்கு அங்கு பேசியபடி சம்பளம் கொடுக்கவில்லை, இதனால் திரும்பி வந்துவிடுமாறு உறவினர்கள் கூறியதால் வந்துள்ளார்.

பணமின்றி வந்ததால் மன உளைச்சலில் அவர் இப்படி நடந்து இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து பிரபாகருக்கு முதலுதவி அளித்து அவரது அண்ணனுடன் அனுப்பி வைத்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum