Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யாழ். வடமராட்சி கிழக்கில் மணல் அகழ இடைக்கால தடை உத்தரவு

Go down

மணல் - யாழ். வடமராட்சி கிழக்கில் மணல் அகழ இடைக்கால தடை உத்தரவு Empty யாழ். வடமராட்சி கிழக்கில் மணல் அகழ இடைக்கால தடை உத்தரவு

Post by oviya Fri Jan 16, 2015 1:36 pm

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த மகேஸ்வரி நிதியத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து ஆப்பு வைத்திருக்கும் நிலையில் குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்கு பொலிஸார் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருக்கின்றனர்.
மகேஸ்வரி நிதியத்தின் மணல் கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் அப்பகுதி மக்களும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இதன்போது அந்தப் பகுதி மக்களுடையதும், பிரதேச செயலரினதும் கருத்துக்களை கேட்டறிந்த, மேற்படி இரு தமிழ்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

வழக்கம் போன்றே அடாத்தாக அந்தப் பகுதிக்குள் நுழைந்த ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியத்தினர் மணல் அகழ்வதற்காக தங்கள் கனரக வாகனங்களை உள்ளே விடுமாறு கூறினர். எனினும் அதற்கு மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தாங்கள் பொலிஸாரின் அனுமதியுடன் வந்திருப்பதாகவும் எதிர்ப்பதானால் பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கும் படியும் கூறினர்.

இதனையடுத்து கூட்டமைப்பின் பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்தனர்.

உடனடியாக பருத்துறை பொலிஸார் அந்தப் பகுதிக்கு வந்து கடந்த 5 வருடங்களாக மணல் அகழ்வதற்காக பயன்படுத்திய அனுமதிப்பத்திரம் முறையற்ற வகையில் பெறப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டியதுடன், இந்தப் பகுதியில் அமைதியின்மையினை உருவாக்கியதற்காக மணல் அகழ்வதற்கும், அகழ்ந்த மணலை அள்ளுவதற்கு இடைக்காலை தடையுத்தரவு, பிறப்பிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வடமராட்சி கிழக்குப் பகுதி மக்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், பிரதேச செயலர் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு குழுவை அமைத்து அந்தக் குழு தமது விளக்கத்தை வழங்கும் வகையில் மணலை அகழவோ அள்ளவோ முடியாது.

அதனை மீள மணல் அகழ்ந்தாலோ, அள்ளப்பட்டாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் இறுக்கமான கட்டளையை பிறப்பித்ததுடன், அந்தப் பகுதியில் மணல் ஏற்றியபடி நின்ற கனரக வாகனங்களிலிருந்து மணலை இறக்கினர்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதேச செயலகம், யாழ்.மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் பணிப்பிற்கமையவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.

இந்நிலையில் முன்னதாக மேற்படி இரு தமிழ்த் தேசிய கட்சிகளினதும் பிரதிநிதிகளை படுமோசமாக திட்டிக் கொண்டிருந்த ஈ.பி.டி.பியினர் அமைதியாக நின்று பொலிஸார் கூறுவதை கேட்டுவிட்டுச் சென்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum