Top posting users this month
No user |
Similar topics
கருணைக்கிழங்கு மசியல்
Page 1 of 1
கருணைக்கிழங்கு மசியல்
கருணைக்கிழங்கு - 3
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்ப் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மல்லிப் பொடி - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கருணைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பெருங்காயத்தைப் பொரிய விடவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.
இதனுடன் கிழங்கு மசியல், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், இவற்றையும் சேர்த்துக் கிளறி அரைத்த மிளகாய் கலவையையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். மிதமான தீயில் கிளறி ஒட்டாமல் வரும் வரை அடுப்பில் வைத்திருந்து பிறகு இறக்கி வைக்கவும். மசியலுக்கு எண்ணெய் கூடுதலாக தேவைப்படும். நாண்ஸ்டிக் தவாவில் கிளறினால் சீக்கிரமே ஒட்டாமல் வெந்து விடும்.
சுவையான கருணைக்கிழங்கு மசியல் தயார். ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். ஃப்ரிஜ்ஜில் வைத்து 2 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்ப் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மல்லிப் பொடி - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கருணைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பெருங்காயத்தைப் பொரிய விடவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.
இதனுடன் கிழங்கு மசியல், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், இவற்றையும் சேர்த்துக் கிளறி அரைத்த மிளகாய் கலவையையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். மிதமான தீயில் கிளறி ஒட்டாமல் வரும் வரை அடுப்பில் வைத்திருந்து பிறகு இறக்கி வைக்கவும். மசியலுக்கு எண்ணெய் கூடுதலாக தேவைப்படும். நாண்ஸ்டிக் தவாவில் கிளறினால் சீக்கிரமே ஒட்டாமல் வெந்து விடும்.
சுவையான கருணைக்கிழங்கு மசியல் தயார். ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். ஃப்ரிஜ்ஜில் வைத்து 2 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum