Top posting users this month
No user |
சாம்பார் வடை
Page 1 of 1
சாம்பார் வடை
வடைக்கு:-
உளுத்தம் பருப்பு - 2 டம்ளர்,
பச்சரிசி - 1 தேக்கரண்டி,
ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 10,
காய்ந்த மிளகாய் - 3,
பச்சை மிளகாய் - 3,
சீரகம் - 1 தேக்கரண்டி,
பூண்டு - 3 பல்,
இஞ்சி- சிறிது,
பெருங்காயம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.
சாம்பாருக்கு:-
துவரம்பருப்பு - 1/4 லிட்டர் + 2 மேசைக்கரண்டி,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ,
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 6,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
தனியா - 3 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி,
புளி - ஒரு எழுமிச்சை பழ அளவு,
வெல்லம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 ஸ்பூன்.
Ads by Block The AdsAd Options
சாம்பார் செய்யும் முறை:-
1/4 லிட்டர் துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேக வைக்கவும்.
புளியை 1 டம்ளர் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, மீதி துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், சீரகம், தனியா, வெந்தயம் தனிதனியாக வறுக்கவும்.
பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முழு வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பின், வெந்த பருப்பை கரைத்து ஊற்றவும்.
புளித்தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
புளி வாசனை போன பிறகு, அரைத்தவற்றை கொதிக்கும் பருப்புடன் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
வடை செய்யும் முறை:-
உளுத்தம் பருப்பு, பச்சரிசி, ஜவ்வரிசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றுடன் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய்சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்த வடைகளை கரண்டி காம்பில் குத்தி, சாம்பார் கொதித்துக் கொண்டிருக்கும் போதே போட்டு, 5 நிமிடம் கழித்து விட்டு எடுக்கவும்.
உளுத்தம் பருப்பு - 2 டம்ளர்,
பச்சரிசி - 1 தேக்கரண்டி,
ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 10,
காய்ந்த மிளகாய் - 3,
பச்சை மிளகாய் - 3,
சீரகம் - 1 தேக்கரண்டி,
பூண்டு - 3 பல்,
இஞ்சி- சிறிது,
பெருங்காயம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.
சாம்பாருக்கு:-
துவரம்பருப்பு - 1/4 லிட்டர் + 2 மேசைக்கரண்டி,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ,
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 6,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
தனியா - 3 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி,
புளி - ஒரு எழுமிச்சை பழ அளவு,
வெல்லம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 ஸ்பூன்.
Ads by Block The AdsAd Options
சாம்பார் செய்யும் முறை:-
1/4 லிட்டர் துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேக வைக்கவும்.
புளியை 1 டம்ளர் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, மீதி துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், சீரகம், தனியா, வெந்தயம் தனிதனியாக வறுக்கவும்.
பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முழு வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பின், வெந்த பருப்பை கரைத்து ஊற்றவும்.
புளித்தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
புளி வாசனை போன பிறகு, அரைத்தவற்றை கொதிக்கும் பருப்புடன் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
வடை செய்யும் முறை:-
உளுத்தம் பருப்பு, பச்சரிசி, ஜவ்வரிசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றுடன் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய்சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்த வடைகளை கரண்டி காம்பில் குத்தி, சாம்பார் கொதித்துக் கொண்டிருக்கும் போதே போட்டு, 5 நிமிடம் கழித்து விட்டு எடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum