Top posting users this month
No user |
Similar topics
பாவக்காய் ஊறுகாய்
Page 1 of 1
பாவக்காய் ஊறுகாய்
பாகற்காய் - 2
பெரிய சிகப்பு வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு (அ)
புளி பேஸ்ட் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பாகற்காயை நீளவாக்கில் நான்காக வெட்டி,(விரும்பினால் விதையை நீக்கிவிட்டு), படத்தில் இருப்பதைப்போல மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கிய பாகற்காய் துண்டுகளுடன், சிறிது உப்பு சேர்த்து கையால் நன்கு கலந்து விட்டு வைக்கவும். இப்படி குறைந்தது ஒரு அரை மணி நேரம் விட வேண்டும். (குறிப்பு: இப்படி செய்வதால், பாகற்காயின் கசப்புத்தன்மை வெளியே வர உதவும்.)
கசகசாவையும், தேங்காய்த் துருவலையும் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு மைய அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் போட்டு கரைத்து வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், உப்பு கலந்து வைத்த பாகற்காய் துண்டுகளை கையால் பிழிந்து, தண்ணீரை எடுத்து விட்டு கடாயில் போட்டு நன்கு வதக்கவும்.
முக்கால் பாகம் பாகற்காய் வெந்ததும், அதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட்டு, மீண்டும் அதே கடாயை அடுப்பில் வைத்து, 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும், மஞ்சள்தூள் சேர்த்து அதனுடன் தக்காளியையும் போட்டு மேலும் வதக்கவும். வெங்காயம், தக்காளி எல்லாம் நன்கு வதங்கியதும், எல்லா தூள் வகைகளையும் கலந்து, உப்பு சேர்த்து ஒருமுறை வதக்கவும். பிறகு இதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது, கரைத்து வைத்த புளித்தண்ணீர்/புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எல்லாமுமாக சேர்ந்து, கொதி வந்த நிலையில், ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பாகற்காய் துண்டுகளை போட்டு, சர்க்கரையையும் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பாகற்காய் வெந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது, சுவையான பாகற்காய் பிரட்டல் தயார். சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பெரிய சிகப்பு வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு (அ)
புளி பேஸ்ட் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பாகற்காயை நீளவாக்கில் நான்காக வெட்டி,(விரும்பினால் விதையை நீக்கிவிட்டு), படத்தில் இருப்பதைப்போல மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கிய பாகற்காய் துண்டுகளுடன், சிறிது உப்பு சேர்த்து கையால் நன்கு கலந்து விட்டு வைக்கவும். இப்படி குறைந்தது ஒரு அரை மணி நேரம் விட வேண்டும். (குறிப்பு: இப்படி செய்வதால், பாகற்காயின் கசப்புத்தன்மை வெளியே வர உதவும்.)
கசகசாவையும், தேங்காய்த் துருவலையும் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு மைய அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் போட்டு கரைத்து வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், உப்பு கலந்து வைத்த பாகற்காய் துண்டுகளை கையால் பிழிந்து, தண்ணீரை எடுத்து விட்டு கடாயில் போட்டு நன்கு வதக்கவும்.
முக்கால் பாகம் பாகற்காய் வெந்ததும், அதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட்டு, மீண்டும் அதே கடாயை அடுப்பில் வைத்து, 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும், மஞ்சள்தூள் சேர்த்து அதனுடன் தக்காளியையும் போட்டு மேலும் வதக்கவும். வெங்காயம், தக்காளி எல்லாம் நன்கு வதங்கியதும், எல்லா தூள் வகைகளையும் கலந்து, உப்பு சேர்த்து ஒருமுறை வதக்கவும். பிறகு இதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது, கரைத்து வைத்த புளித்தண்ணீர்/புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எல்லாமுமாக சேர்ந்து, கொதி வந்த நிலையில், ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பாகற்காய் துண்டுகளை போட்டு, சர்க்கரையையும் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பாகற்காய் வெந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது, சுவையான பாகற்காய் பிரட்டல் தயார். சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum