Top posting users this month
No user |
Similar topics
மட்டன் காலிஃப்ளவர்
Page 1 of 1
மட்டன் காலிஃப்ளவர்
மட்டன் - அரைக்கிலோ
காலிஃப்ளவர் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
பூண்டு - நான்கு பற்கள்
பச்சைமிளகாய் - நான்கு
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு கோப்பை
பட்டை - ஒரு துண்டு
இலவங்கம் - நான்கு
ஏலக்காய் - நான்கு
கொத்தமல்லி - ஒரு கட்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரைக்கோப்பை
கறியை துண்டுகளாக்கி உப்புத்தூள் அரைதேக்கரண்டி, மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி, நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு இரண்டு கோப்பை தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.
காலிஃப்ளவரை சற்று பெரியத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி பூண்டை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து காலிஃப்ளவரை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே எண்ணெயில் வாசனைப் பொருட்களை போட்டு வறுத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டை போட்டு அடிப்பிடிக்காமல் வதக்கவும்.
பிறகு தக்காளியை கொட்டி மசிய வதக்கவும். தொடர்ந்து எல்லாத்தூள் வகைகளையும் போட்டு நன்கு வதக்கி விட்டு தயிரை ஊற்றி நன்கு கிளறி விடவும். உப்புத்தூளை போட்டு நன்கு வதக்கவும்.
மசாலா கெட்டியானவுடன் வேகவைத்துள்ள கறியை கொட்டி நன்கு கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
அடுப்பின் அனலை குறைத்துவைக்கவும். குழம்பு கொதித்து கெட்டியானவுடன் பொரித்துவைதுள்ள காலிஃப்ளவரை போட்டு நன்கு கிளறி இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லியை தூவி சூடாக பரிமாறவும்.
காலிஃப்ளவர் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
பூண்டு - நான்கு பற்கள்
பச்சைமிளகாய் - நான்கு
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு கோப்பை
பட்டை - ஒரு துண்டு
இலவங்கம் - நான்கு
ஏலக்காய் - நான்கு
கொத்தமல்லி - ஒரு கட்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரைக்கோப்பை
கறியை துண்டுகளாக்கி உப்புத்தூள் அரைதேக்கரண்டி, மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி, நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு இரண்டு கோப்பை தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.
காலிஃப்ளவரை சற்று பெரியத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி பூண்டை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து காலிஃப்ளவரை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே எண்ணெயில் வாசனைப் பொருட்களை போட்டு வறுத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டை போட்டு அடிப்பிடிக்காமல் வதக்கவும்.
பிறகு தக்காளியை கொட்டி மசிய வதக்கவும். தொடர்ந்து எல்லாத்தூள் வகைகளையும் போட்டு நன்கு வதக்கி விட்டு தயிரை ஊற்றி நன்கு கிளறி விடவும். உப்புத்தூளை போட்டு நன்கு வதக்கவும்.
மசாலா கெட்டியானவுடன் வேகவைத்துள்ள கறியை கொட்டி நன்கு கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
அடுப்பின் அனலை குறைத்துவைக்கவும். குழம்பு கொதித்து கெட்டியானவுடன் பொரித்துவைதுள்ள காலிஃப்ளவரை போட்டு நன்கு கிளறி இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லியை தூவி சூடாக பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum