Top posting users this month
No user |
Similar topics
சோயாமீற் & கிழங்குப்பிரட்டல்
Page 1 of 1
சோயாமீற் & கிழங்குப்பிரட்டல்
உருளைக்கிழங்கு - 400 கிராம்
சோயா மீற் - 100 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 4 அல்லது 5 பற்கள்
கறித்தூள் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம் சாறு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு நெட்டு
கிராம்பு, ஏலக்காய் - 3 அல்லது 4
கறுவா - ஒரு துண்டு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சோயாவுடன் நன்கு கொதித்த தண்ணீரை மூழ்கும் அளவு ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு மூடி அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் எடுத்து நீரில்லாமல் பிழிந்து பெரியதாக இருந்தால் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும். சோயாவை பொரித்து எடுத்துக் கொள்ளவும். (நன்கு முறுகத் தேவையில்லை)
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து வதக்கவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் கிழங்கு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
கிழங்குடன் 300 மி.லி தண்ணீர் ஊற்றி அரை தேக்கரண்டி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும், சோயாவையும் கொட்டிப் பிரட்டி மூடி வேக விடவும்.
கிழங்கு அவிந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்துப் பிரட்டவும்.
நன்கு பிரட்டலாக ஆனதும் இறக்கி, தேசிக்காய் சேர்த்துப் பிரட்டவும்.
சுவைமிக்க சோயாமீற் கறி தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum