Top posting users this month
No user |
ஸ்ரீ.சு.கட்சியின் அரசை அமைக்கும் தேவை ஜனாதிபதிக்கு இல்லை: மனுஷ நாணயக்கார
Page 1 of 1
ஸ்ரீ.சு.கட்சியின் அரசை அமைக்கும் தேவை ஜனாதிபதிக்கு இல்லை: மனுஷ நாணயக்கார
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உண்மையான தேவை இருப்பதை காண முடியவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முன்னாள் தென் மாகாண சபை உறுப்பிரன் கே.பி. அமரபாலவின் வீட்டில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அக்மீமன தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் புத்தர் ஆசிர்வதிக்கட்டும் என்ற பெயர் பலகையை மாட்டிக்கொண்டு மாடுகளை கொல்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
20வது திருத்தச் சட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை. அதற்கும் அந்த கட்சி தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் ஒருவரை நியமித்து 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுமாறு நாங்கள் கூறுகிறோம். நாட்டுக்குள் பாரியளவில் கொள்ளைகள் நடந்து வருகின்றன.
ஊடக சுதந்திரம் என்பது வார்த்தைகளுக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.அழகான சர்வாதிகாரதே நாட்டில் அமுலில் உள்ளது.
மத்திய வங்கி, காப்புறுதிக் கூட்டுத்தாபனம், சமையல் எரிவாயு நிறுவனங்களில் ஊழல், மோசடி அரசாள்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கொள்ளை, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடுகிறது என கடந்த காலத்தில் நாட்டுக்குள் நிலைப்பாடு ஒன்றை கட்டியெழுப்பினர். எனினும் அது தற்போது புஷ்வாணமாகியுள்ளது எனவும் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தென் மாகாண சபை உறுப்பிரன் கே.பி. அமரபாலவின் வீட்டில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அக்மீமன தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் புத்தர் ஆசிர்வதிக்கட்டும் என்ற பெயர் பலகையை மாட்டிக்கொண்டு மாடுகளை கொல்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
20வது திருத்தச் சட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை. அதற்கும் அந்த கட்சி தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் ஒருவரை நியமித்து 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுமாறு நாங்கள் கூறுகிறோம். நாட்டுக்குள் பாரியளவில் கொள்ளைகள் நடந்து வருகின்றன.
ஊடக சுதந்திரம் என்பது வார்த்தைகளுக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.அழகான சர்வாதிகாரதே நாட்டில் அமுலில் உள்ளது.
மத்திய வங்கி, காப்புறுதிக் கூட்டுத்தாபனம், சமையல் எரிவாயு நிறுவனங்களில் ஊழல், மோசடி அரசாள்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கொள்ளை, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடுகிறது என கடந்த காலத்தில் நாட்டுக்குள் நிலைப்பாடு ஒன்றை கட்டியெழுப்பினர். எனினும் அது தற்போது புஷ்வாணமாகியுள்ளது எனவும் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum