Top posting users this month
No user |
Similar topics
ஈஸி சாம்பார்
Page 1 of 1
ஈஸி சாம்பார்
துவரம் பருப்பு - 150 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 8
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 4 கொத்து
கொத்தமல்லி தழை - 3 கொத்து
உப்பு - அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிய கோலிகுண்டு அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
வெங்காயத்தை பொடியாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கி கொள்ளவும், பூண்டை தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லித்தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து 1 1/2 கப் அளவுக்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து பருப்பு முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
அதனுடன் பூண்டு, நறுக்கின வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேகவைத்து எடுத்த சாம்பார் கலவையை கரண்டியால் மசித்து விட்டு வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் கொத்தமல்லித் தழைகளை போட்டு வதக்கவும்.
பிறகு கரைத்த புளித்தண்ணீரை அதில் ஊற்றி ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
மசித்து வைத்திருக்கும் பருப்பு கலவையில் கொதித்த புளித்தண்ணீரை ஊற்றி அரை மேசைக்கரண்டி உப்பு சேர்க்கவும்.
பிறகு அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான ஈஸியான சாம்பார் தயார்.
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 8
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 4 கொத்து
கொத்தமல்லி தழை - 3 கொத்து
உப்பு - அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிய கோலிகுண்டு அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
வெங்காயத்தை பொடியாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கி கொள்ளவும், பூண்டை தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லித்தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து 1 1/2 கப் அளவுக்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து பருப்பு முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
அதனுடன் பூண்டு, நறுக்கின வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேகவைத்து எடுத்த சாம்பார் கலவையை கரண்டியால் மசித்து விட்டு வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் கொத்தமல்லித் தழைகளை போட்டு வதக்கவும்.
பிறகு கரைத்த புளித்தண்ணீரை அதில் ஊற்றி ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
மசித்து வைத்திருக்கும் பருப்பு கலவையில் கொதித்த புளித்தண்ணீரை ஊற்றி அரை மேசைக்கரண்டி உப்பு சேர்க்கவும்.
பிறகு அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான ஈஸியான சாம்பார் தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum