Top posting users this month
No user |
செட்டிநாட்டு தக்காளி குருமா
Page 1 of 1
செட்டிநாட்டு தக்காளி குருமா
தக்காளி - 10
பச்சைமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
முந்திரிப்பருப்பு - 8
பூண்டு - 3 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
கசகசா - ஒரு தேக்கரண்டி
பட்டை - இரண்டு சிறிய துண்டுகள்
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 3 தேக்கரண்டி
தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரி, பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், பூண்டு, சிறிது நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கலவை நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். சுவையான செட்டிநாடு தக்காளி குருமா தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum