Top posting users this month
No user |
இனிப்பு சோமாஸ்
Page 1 of 1
இனிப்பு சோமாஸ்
பில்லிங்:
கருப்பு எள் - ஒரு மேசைக்கரண்டி (வறுத்தது)
வெள்ளை எள் - இரண்டு மேசைக்கரண்டி (வறுத்தது)
தேங்காய் - அரை முடி (துருவியது)
சர்க்கரை - முக்கால் டம்ளர்
நெய் - ஒரு தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - தலா ஐந்து ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
மாவு தயாரிக்க:
மைதா மாவு - கால் கிலோ
ரவை - ஐம்பது கிராம்
இட்லி சோடா - சிறிது
உப்பு - தேவைக்கு
டால்டா (அ) பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி
மேலே குறிப்பிட்டிருக்கும் தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொண்டு அதில் ரவை, இட்லி சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து டால்டாவை உருக்கி ஊற்றி நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம் போட்டு வறுத்து விட்டு வெள்ளை எள் மற்றும் கருப்பு எள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக சர்க்கரையை சேர்த்து வதக்கி இறக்கவும்.
கலவை சற்று கெட்டியாக இருக்கும், எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாத்தியாக தேய்த்து அதை எடுத்து சோமாஸ் செய்யும் அச்சியில் வைத்து அதனுள் செய்து வைத்திருக்கும் பில்லிங்கை வைத்து மூடி வைக்கவும்.
எல்லாவற்றையும் இதே போல் சோமாஸ்களாக செய்து வைத்துக் கொள்ளவும். சிலவற்றை மட்டும் குழந்தைகள் விரும்புவது போல் சிறிய சோமாஸாக செய்துக் கொள்ளவும். தட்டில் ஒட்டாமல் இருக்க மாவு தூவி அடுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து செய்து வைத்திருக்கும் சோமாஸை போட்டு பொரித்து எடுக்கவும். இரு புறமும் திருப்பி விட்டு நன்கு பொரிந்ததும் கருகவிடாமல் எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும்.
சுவையான இனிப்பு சோமாஸி ரெடி.
கருப்பு எள் - ஒரு மேசைக்கரண்டி (வறுத்தது)
வெள்ளை எள் - இரண்டு மேசைக்கரண்டி (வறுத்தது)
தேங்காய் - அரை முடி (துருவியது)
சர்க்கரை - முக்கால் டம்ளர்
நெய் - ஒரு தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - தலா ஐந்து ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
மாவு தயாரிக்க:
மைதா மாவு - கால் கிலோ
ரவை - ஐம்பது கிராம்
இட்லி சோடா - சிறிது
உப்பு - தேவைக்கு
டால்டா (அ) பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி
மேலே குறிப்பிட்டிருக்கும் தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொண்டு அதில் ரவை, இட்லி சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து டால்டாவை உருக்கி ஊற்றி நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம் போட்டு வறுத்து விட்டு வெள்ளை எள் மற்றும் கருப்பு எள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக சர்க்கரையை சேர்த்து வதக்கி இறக்கவும்.
கலவை சற்று கெட்டியாக இருக்கும், எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாத்தியாக தேய்த்து அதை எடுத்து சோமாஸ் செய்யும் அச்சியில் வைத்து அதனுள் செய்து வைத்திருக்கும் பில்லிங்கை வைத்து மூடி வைக்கவும்.
எல்லாவற்றையும் இதே போல் சோமாஸ்களாக செய்து வைத்துக் கொள்ளவும். சிலவற்றை மட்டும் குழந்தைகள் விரும்புவது போல் சிறிய சோமாஸாக செய்துக் கொள்ளவும். தட்டில் ஒட்டாமல் இருக்க மாவு தூவி அடுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து செய்து வைத்திருக்கும் சோமாஸை போட்டு பொரித்து எடுக்கவும். இரு புறமும் திருப்பி விட்டு நன்கு பொரிந்ததும் கருகவிடாமல் எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும்.
சுவையான இனிப்பு சோமாஸி ரெடி.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum