Top posting users this month
No user |
Similar topics
சாய்பாபா விரத வழிமுறைகள்…
Page 1 of 1
சாய்பாபா விரத வழிமுறைகள்…
சாய்பாபாவிடம் வேண்டுதல் வைத்து 9 வியாழக்கிழமைகள் விரதம்download (37) இருந்தால் நினைத்தது நடக்கும். அந்த விரதம் இருக்கும் வழிமுறை வருமாறு:-
1. இந்த விரத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.
2. இந்த விரத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் ஏற்கலாம்.
3. இந்த விரதம் அற்புதப் பலன்களைத் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.
4. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையிலும், சாய் நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
5. காலை அல்லது மாலையில் சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாய்பாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.
மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாய் விரத கதையைப் படிக்கவும். சாய்பாபாவை மனதில் நினைத்து தியானம் செய்யவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும்.
6. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.
7. ஒன்பது வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாய்பாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யலாம்.
8. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம்.
9. விரதமிருக்கும் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலோ விரதம் இருக்க முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அடுத்த வியாழக்கிழமை விரதம் இருந்து, ஒன்பது வியாழக்கிழமைகளையும் நிறைவு செய்யவும்.
1. இந்த விரத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.
2. இந்த விரத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் ஏற்கலாம்.
3. இந்த விரதம் அற்புதப் பலன்களைத் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.
4. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையிலும், சாய் நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
5. காலை அல்லது மாலையில் சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாய்பாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.
மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாய் விரத கதையைப் படிக்கவும். சாய்பாபாவை மனதில் நினைத்து தியானம் செய்யவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும்.
6. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.
7. ஒன்பது வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாய்பாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யலாம்.
8. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம்.
9. விரதமிருக்கும் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலோ விரதம் இருக்க முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அடுத்த வியாழக்கிழமை விரதம் இருந்து, ஒன்பது வியாழக்கிழமைகளையும் நிறைவு செய்யவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum