Top posting users this month
No user |
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விசாரணை செய்யப்பட்டால் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்: ஜகத் பாலபட்டபெந்தி
Page 1 of 1
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விசாரணை செய்யப்பட்டால் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்: ஜகத் பாலபட்டபெந்தி
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக விசாரணை செய்யும் போது சபாநாயகருக்கு அது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படும் என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் ஊழல் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விசாரணை செய்யப்பட்டால் அது குறித்து முன்கூட்டியே சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுமாயின் அது தொடர்பில் பதவி வகிக்கும் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் சபாநாயகர் சமால் ராஜபக்சவை சந்தித்த போது அவர் இந்த உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பேசும் நோக்கில் சபாநாயகர் நேற்று ஆணைக்குழுவின் தலைவர் பாலபட்டபெந்தியை அழைத்திருந்தார்.
எதிர்வரும் காலங்களில் ஊழல் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விசாரணை செய்யப்பட்டால் அது குறித்து முன்கூட்டியே சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுமாயின் அது தொடர்பில் பதவி வகிக்கும் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் சபாநாயகர் சமால் ராஜபக்சவை சந்தித்த போது அவர் இந்த உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பேசும் நோக்கில் சபாநாயகர் நேற்று ஆணைக்குழுவின் தலைவர் பாலபட்டபெந்தியை அழைத்திருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum