Top posting users this month
No user |
புத்திர பாக்கியம் தரும் மாசிலாமணீஸ்வரர்
Page 1 of 1
புத்திர பாக்கியம் தரும் மாசிலாமணீஸ்வரர்
திருமுல்லைவாயலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோயில் சுமார் 1800 ஆண்டு பழமைவாய்ந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் திருமுல்லைவாயல் பகுதி வனமாக இருந்தது. அப்போது இங்கிருந்த வாணன், ஓணன் என்ற 2 அசுரர்கள் முனிவர்களை துன்புறுத்தினர். அவர்களை எதிர்த்து போர் செய்ய வந்த தொண்டைமான் என்ற அரசனை அசுரர்கள் கொல்ல முயன்றனர். இதனால் அச்சம் அடைந்த மன்னன், பட்டத்து யானை மீது ஏறி தப்பிச்சென்று கொண்டிருந்தான். அப்போது யானையின் கால் அங்கிருந்த முல்லைகொடியில் சிக்கிக் கொண்டது.
அந்த கொடியை அரசன் வெட்டியபோது வெட்டிய இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அதிர்ச்சி அடைந்த மன்னன் கீழே இறங்கிவந்து பார்த்தபோது, மண்ணில் புதைத்திருந்த சிவலிங்கத்தில் இருந்து ரத்தம் வந்துகொண்டு இருந்தது. மனம் உடைந்த மன்னன் அங்கேயே உயிரை மாய்க்க முயன்றான். அப்போது சிவபெருமான் தோன்றி மன்னனுக்கு அருள் பாலித்தார். நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும்படி செய்தார். சிவன் தன்னை மாசில்லாதவன் என்று கூறியதால் இறைவனுக்கு மாசிலாமணீஸ்வரர் என்று மன்னன் பெயர் சூட்டினார்.
மேலும், அசுரர்கள் வைத்திருந்த 2 வெள்ளெருக்கம் தூண்களை கொண்டு வந்த மன்னன் கோயில் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. இந்த தூண்கள் இன்றும் கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் மாசிலாமணீஸ்வரர். லிங்கத்தின் மேல் பகுதியில் வெட்டுப்பட்ட தடம் உள்ளது. கொடி போன்ற இடை கொண்டதால் இங்குள்ள அம்பாள் கொடியிடைநாயகி என அழைக்கப்படுகிறார்.
ஆலயபிரகாரத்தில் சோழபுரீஸ்வரர், லவகுசர்கள் வணங்கிய குசல்புரீஸ்வரர், வள்ளி,தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. வலம்புரி விநாயகரும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இங்குள்ள குளம் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீராடி, மாசிலாமணீஸ்வரரை வணங்கினால் பாவங்கள் நீங்கும். இங்குள்ள நந்திக்கு பூஜை செய்த மாலையை அணிந்து கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
எதிர் திசையில் நந்தி
மாசிலாமணீஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் நந்தி, அசுரர்களை அழிப்பதற்காக மன்னன் தொண்டைமானுக்கு துணையாக சென்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நந்தி சுவாமியை பார்த்தபடி இல்லாமல் எதிர் திசையை நோக்கி திரும்பியபடி உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி இக்கோயிலில் இல்லை. சூரியனுக்கு சன்னதி உள்ளது.
மாசியில் தெப்பத் திருவிழா
இந்த கோயிலில் வைகாசி மாதம் பிரமோற்சவம், ஆனி மாதம் வசந்த உற்சவம், மாசி மாதத்தில் தெப்ப திருவிழா நடத்தப்படுகிறது. அம்மனை குளிர்விக்கும் வகையில் தினமும் அம்மனுக்கு சந்தன காப்பு செய்யப்படுகிறது. சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்றும், மறுநாளும் நிஜ மேனியுடன் இந்த அம்மன் அருள் பாலிக்கிறார். காலை 6.30 மணி முதல் நண்பகல் 12 வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.
அந்த கொடியை அரசன் வெட்டியபோது வெட்டிய இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அதிர்ச்சி அடைந்த மன்னன் கீழே இறங்கிவந்து பார்த்தபோது, மண்ணில் புதைத்திருந்த சிவலிங்கத்தில் இருந்து ரத்தம் வந்துகொண்டு இருந்தது. மனம் உடைந்த மன்னன் அங்கேயே உயிரை மாய்க்க முயன்றான். அப்போது சிவபெருமான் தோன்றி மன்னனுக்கு அருள் பாலித்தார். நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும்படி செய்தார். சிவன் தன்னை மாசில்லாதவன் என்று கூறியதால் இறைவனுக்கு மாசிலாமணீஸ்வரர் என்று மன்னன் பெயர் சூட்டினார்.
மேலும், அசுரர்கள் வைத்திருந்த 2 வெள்ளெருக்கம் தூண்களை கொண்டு வந்த மன்னன் கோயில் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. இந்த தூண்கள் இன்றும் கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் மாசிலாமணீஸ்வரர். லிங்கத்தின் மேல் பகுதியில் வெட்டுப்பட்ட தடம் உள்ளது. கொடி போன்ற இடை கொண்டதால் இங்குள்ள அம்பாள் கொடியிடைநாயகி என அழைக்கப்படுகிறார்.
ஆலயபிரகாரத்தில் சோழபுரீஸ்வரர், லவகுசர்கள் வணங்கிய குசல்புரீஸ்வரர், வள்ளி,தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. வலம்புரி விநாயகரும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இங்குள்ள குளம் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீராடி, மாசிலாமணீஸ்வரரை வணங்கினால் பாவங்கள் நீங்கும். இங்குள்ள நந்திக்கு பூஜை செய்த மாலையை அணிந்து கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
எதிர் திசையில் நந்தி
மாசிலாமணீஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் நந்தி, அசுரர்களை அழிப்பதற்காக மன்னன் தொண்டைமானுக்கு துணையாக சென்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நந்தி சுவாமியை பார்த்தபடி இல்லாமல் எதிர் திசையை நோக்கி திரும்பியபடி உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி இக்கோயிலில் இல்லை. சூரியனுக்கு சன்னதி உள்ளது.
மாசியில் தெப்பத் திருவிழா
இந்த கோயிலில் வைகாசி மாதம் பிரமோற்சவம், ஆனி மாதம் வசந்த உற்சவம், மாசி மாதத்தில் தெப்ப திருவிழா நடத்தப்படுகிறது. அம்மனை குளிர்விக்கும் வகையில் தினமும் அம்மனுக்கு சந்தன காப்பு செய்யப்படுகிறது. சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்றும், மறுநாளும் நிஜ மேனியுடன் இந்த அம்மன் அருள் பாலிக்கிறார். காலை 6.30 மணி முதல் நண்பகல் 12 வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum