Top posting users this month
No user |
Similar topics
வீணை ஆசிரியருக்கு மரியாதை !
Page 1 of 1
வீணை ஆசிரியருக்கு மரியாதை !
வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில் பிறந்தார் வாரியார். இருபத்து மூன்று வயது வாலிபனாக இருந்தபோது, அவருடைய தந்தை மல்லையதாசர் சென்னையில் ஆனைகவுனி பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் வீணை கற்க ஏற்பாடு செய்தார். தினமும் காலை 11மணிக்கு டிபனை முடித்துவிட்டு, வீணையைத் தோளில்சுமந்து கொண்டு நடந்தே ஆனைகவுனிக்குச் சென்று விடுவார். அங்கு சென்றவுடன் ஆசிரியருக்கு சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து நமஸ்காரம் செய்வார். வீணைப்பாடம் முடிந்தவுடன், மீண்டும் ஒருமுறை விழுந்து வணங்குவார். தொடர்ந்து வாரியார் வணங்குவதைக் கண்ட வரதாச்சாரியார், ""ஏன் இரண்டுமுறை வணங்குகிறாய்?'' என்று கேட்டார்.""பெரியவர்களை, பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை எத்தனை முறை வணங்கினால் என்ன?'' என்று பதில் தந்தார். இப்படி வாரியார் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வீணைவகுப்பும், மற்றநேரங்களில் தமிழ் பக்திஇலக்கியங்களையும் படித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் தந்தையார் மல்லையதாசர் கடிதம் எழுதியிருந்தார். ""வீணை கற்றது போதும். ஊருக்கு வந்துவிடு!'' என்றிருந்தது. தந்தையின் வாக்கை வேதவாக்காக கருதும் வாரியாரும், காங்கேயநல்லூருக்கு கிளம்ப ஆயத்தமானார்.குருகாணிக்கையாக வரதாச்சாரியாருக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்று தந்தைக்கு கடிதத்தில் தெரிவித்தார். அவரும் தம்மிடம் இருந்த இரண்டு எட்டுமுழ வேட்டிகளை அனுப்பி வைத்தார். அது மட்டும் போதாது, தன்னுடைய குருநாதருக்கு நினைவுச்சின்னமாக ஏதாவது தரவேண்டும் என்ற எண்ணம் வாரியாருக்கு மேலிட்டது. முருகன் கோயிலுக்குச் சென்று, ""முருகா! என் குருநாதருக்கு குருகாணிக்கை ஏதும் கொடுக்க முடியவில்லையே,'' என்று கண்ணீர் சிந்தி வழிபட்டார். மறுநாள் புரசைவாக்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வாய்ப்புவந்தது. சன்மானமாக நாற்பது ரூபாய் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் நகைக்கடைக்கு கிளம்பினார். அப்போது 1929ம் ஆண்டு. ஒரு பவுன் விலையே பதின்மூன்று ரூபாய் இரண்டணா (12 காசு) தான். இரண்டரைப்பவுன் தங்கச் சங்கிலியும், அரைப்பவுன் ராமர் பட்டாபிஷேக டாலரும் வாங்கினார். மீதி சில்லரையில் பழவகைகளை வாங்கிக் கொண்டு ஆசிரியர் வீட்டுக்கு கிளம்பினார். ஒருதட்டில் பழங்கள், தந்தையார் கொடுத்த வேஷ்டிகள், தங்கச்சங்கிலி, டாலர் ஆகியவற்றை வைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார். ""என்னை ஊருக்கு வரும்படி பிதாவின் கட்டளை. நான் ஏழை. தங்களுக்கு அதிகம் தர ஆற்றல் இல்லாதவன். இந்தச் சிறுகாணிக்கையை ஏற்றுக் கொண்டு ஆசீர்வதியுங்கள்'' என்று சொல்லி கண்ணீர் சிந்தினார். வாரியாரின் கண்ணீரைத் துடைத்த ஆசிரியர், ""நீ உத்தமமான பிள்ளை. உனக்குத் தெய்வம் துணை செய்யும். சவுக்கியமாகப் போய் வா! சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னை வந்து பார்!'' என்று கூறி வாழ்த்தினார். ""சுவாமி! நான் நன்றாகச் சம்பாதிக்கிறபோது உங்களுக்கு நிறைய தருவேன்'' என்று சொல்லி விடைபெற்றார் வாரியார்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum