Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதம நீதியரசர் நீதித்துறையின் கௌவரத்தை பாதுகாக்க வேண்டும்: நீதி சேவைகள் சங்கம்

Go down

பிரதம நீதியரசர் நீதித்துறையின் கௌவரத்தை பாதுகாக்க வேண்டும்: நீதி சேவைகள் சங்கம் Empty பிரதம நீதியரசர் நீதித்துறையின் கௌவரத்தை பாதுகாக்க வேண்டும்: நீதி சேவைகள் சங்கம்

Post by oviya Mon Jan 26, 2015 11:38 am

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினத்தில் அலரி மாளிகையில் இருந்தாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஒத்துக்கொண்டமை குறித்து ஆச்சரியமடைவதாக நீதி சேவைகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொஹான் பீரிஸ், பிரதம நீதியரசர் என்ற பதவியின் கௌரவம் மற்றும் அதன் உயரிய பண்புகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நீதி சேவைகள் சங்கத்தில் நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதிகள் அங்கம் வகித்து வருகின்றனர்.

கடந்த 8 ஆம் திகதி தேர்தல் முடிவுகளை புறந்தள்ளி விட்டு முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியை தொடர்வது குறித்து அலரி மாளிகையில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பேச்சுவார்த்தையில் பிரதம நீதியரசர் கலந்து கொண்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் குறித்து நீதி சேவைகள் சங்கம் கடும் அதிருப்திய வெளியிடுவது என சங்கத்தின் நிறைவேற்று சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

குற்றத்துடன் சம்பந்தப்பட்டமை தொடர்பான வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் அலரி மாளிகையில் நடந்ததாக கூறப்படும் சதித்திட்டத்தின் போது பிரதம நீதியரசர் அங்கிருந்தமை தொடர்பில் சங்கம் ஆச்சரியமடைவதாகவும் அப்படியான முக்கியமான பிரச்சினைகளின் போது நீதித்துறை பக்கசார்பின்றி செயற்படுவது முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.

அப்படியான சந்தர்ப்பங்களில் அரசியல் மற்றும் நிறைவேற்று அதிகாரங்களின் தீர்மானங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என சங்கம் வலியுறுத்துவதாக அதன் செயலாளர் ரங்க திஸாநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum