Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லசந்த கொலை தொடர்பான விசாரணைகளை சி.ஐ.டியிடம் ஒப்படையுங்கள்: ஊடகவியலாளர்கள் சங்கம்

Go down

லசந்த கொலை தொடர்பான விசாரணைகளை சி.ஐ.டியிடம் ஒப்படையுங்கள்: ஊடகவியலாளர்கள் சங்கம் Empty லசந்த கொலை தொடர்பான விசாரணைகளை சி.ஐ.டியிடம் ஒப்படையுங்கள்: ஊடகவியலாளர்கள் சங்கம்

Post by oviya Mon Jan 26, 2015 11:38 am

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை இதுவரை பயங்கரவாத விசாரணை பிரிவே மேற்கொண்டு வந்தது.

எனினும் இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து திருப்தியடைய முடியாது என சங்கத்தின் தலைவர் மந்தனா இஸ்மையில் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவம் குறித்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் விசாரணை நடத்தப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் சிறையில் இல்லை. கைது செய்யப்பட்ட இருவர் இறந்து போயினர். மற்றைய சந்தேக நபரான இராணுவ அதிகாரி ஒருவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான கோப்புகள் இன்னும் பயங்கரவாத விசாரணைப் பிரினரிடமே உள்ளது.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய அந்த கோப்புகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்து விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் மந்தனா இஸ்மையில் கூறியுள்ளார்.

குறித்த கொலையுடன் தொடர்புடைய சில இராணுவ அதிகாரிகள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் மந்தனா இஸ்மையில் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum