Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இராணுவ முகாமுக்குள் சென்ற பந்து! குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

Go down

இராணுவ முகாமுக்குள் சென்ற பந்து! குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல் Empty இராணுவ முகாமுக்குள் சென்ற பந்து! குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

Post by oviya Sun Jan 25, 2015 12:03 pm

வடமராட்சி, எள்ளங்குளம் பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

எள்ளங்குளம் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர் குழுவினர் உதைப்பந்தாட்டம் விளையாடியுள்ளனர்.

உதைப்பந்தாட்டம் விளையாடியவர்களின் பந்து அருகில் இருந்த இராணுவ முகாமிற்குள் விழுந்துள்ளது.

இதனை எடுப்பதற்காக இராணுவ முகாமுக்குள் சென்ற குடும்பஸ்தர் மீது அங்கு நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் இருந்து ஒருவாறு தப்பிய அவர் வீட்டுக்கு ஓடியுள்ளார். நண்பர்களும் ஓடித் தப்பிவிட்டனர்.

தனது மோட்டார் சைக்கிளை மைதானத்தில் நிறுத்தியிருந்த அவர் அதை எடுக்க மீண்டும் சென்றுள்ளார். இதன்போது அவரை பிடித்த இராணுவத்தினர் சரமாரியாக மீண்டும் தாக்கியுள்ளனர்.

இராணுவத்தினரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் ஊறணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதே பகுதியைச் நேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜா ஜெகன் (வயது- 29) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் வைத்தியசாலைக்கு சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த நபரை மிரட்டியதுடன், பொலிஸ் முறைப்பாட்டை மீளப்பெற வேண்டுமென எச்சரிக்கை விடுத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum