Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில்

Go down

அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில் Empty அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில்

Post by oviya Sat Jan 24, 2015 6:06 am

மூலவர் : காரணவிநாயகர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : மத்தம்பாளையம்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

விநாயகர் சதுர்த்தி

தல சிறப்பு:

கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம்.

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் தொடர்ந்து திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில், மத்தம்பாளையம் - 641 019 கோயம்புத்தூர் மாவட்டம்

போன்:

+91-4254 - 272 900

பொது தகவல்:


காரணமுருகன், ஆஞ்சநேயர் சன்னதிகள் இங்குள்ளன.







பிரார்த்தனை

விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். இதுதவிர புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.


நேர்த்திக்கடன்:

சிதறுகாய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

இங்குள்ள காரணவிநாயகர் கோயில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் ஏதோ காரணத்தால் விநாயகர் அமர்ந்த காரணத்தால் இவரை காரண விநாயகர் என்றே அழைக்கின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பசு, காளைகளுடன் விவசாயப் பணிகளை நடத்தி வந்தனர். கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்வுக்காகவும் சிவனின் வாகனமான நந்தியை விநாயகரின் அருகில் வைத்தனர். கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம்.


தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள் ஊரில் விநாயகர் கோயில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர். ஓரிடத்தில் வண்டியின் அச்சு முறியவே சிலையை இறக்கிவிட்டு, பழுது பார்த்தனர். மீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோயிலும் கட்டினர்.

ஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ் வழியே ரோடு அமைப்பதற்காக கோயிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோயிலை அகற்ற ஏற்பாடு செய்தனர். அன்று இரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது. இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோயில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum