Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடக்கில் கல்வி நிலையை முன்னிலைப்படுத்த விசேட கவனம்: இராதாகிருஷ்ணன்

Go down

வடக்கில் கல்வி நிலையை முன்னிலைப்படுத்த விசேட கவனம்: இராதாகிருஷ்ணன் Empty வடக்கில் கல்வி நிலையை முன்னிலைப்படுத்த விசேட கவனம்: இராதாகிருஷ்ணன்

Post by oviya Fri Jan 23, 2015 1:42 pm

வடக்கில் மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள், பயிற்சிக் கலாசாலைகள் சர்வகலாசாலைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, அங்கு பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அங்குள்ள முதலமைச்சர் உட்பட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தீர்வை பெற்றுக்கொடுக்கவும் இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரவும் எதிர்பார்த்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்ற ஆசிரிய நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய கல்வியியல் கல்லூரி, ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, ஆசிரிய மத்திய நிலையங்களுக்கான தமிழ் மொழி மூலம் 107 பேரும் சிங்கள மொழி மூலம் 108 பேருமாக மொத்தம் 215 பேருக்கான நியமனங்கள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோரால் கொழும்பில் அமைந்துள்ள இசுறுபாய அமைச்சின் கேட் போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கல்வியின் மூலமே ஒரு நாட்டின் பல்வேறு துறைகளும் அபிவிருத்தி அடைய முடியும். உலகின் ஏனைய நாடுகளுக்கு நிகராக எமது இலங்கை உயர்வடைய வேண்டுமானால் கல்வித்துறை சரியான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும்.

எமது நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் சம வாய்ப்பை பெற்றுக்கொடுக்க எனக்கு கிடைத்துள்ள இந்த அமைச்சுப் பதவியை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நன்கு ஆராய்ந்து எனக்களித்துள்ள இந்த பதவியை எந்த நோக்கத்திற்காக எனக்கு வழங்கியுள்ளார்களோ அதன்படி செயலாற்றுவேன்.

மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மூவினத்தைச் சேர்ந்த கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் இணைந்து கல்வி மேம்பாட்டுக்காக ஒன்றிணைந்து செயலாற்றிய அனுபவம் எனக்கு உண்டு.

அதேசமயம் மலையக கல்வி எம் நாட்டில் பின்னடைவாகக் காணப்படுவதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயமாகும். ஐந்து வீதமான மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெறவேண்டி இந்த காலகட்டத்தில் ஒரு வீதமான மாணவர்களே அனுமதி பெறுகின்றமை மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

மலையகத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் விஞ்ஞான, வர்த்தக துறைகளுக்கு தகுதியான மாணவர்கள் உருவான போதும் உயர் தரத்தில் இத்துறைகளில் பணிபுரிய போதிய ஆசிரிய ஆளணியினர் இல்லை. எனவே ஓரிரு பட்டதாரி ஆசிரியர்களுடன் மூன்று பாடங்களிலும் சித்திபெற மாணவர்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெறுவது மிகவும் சவாலான ஒரு விடயமாகும். இத்துடன் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் ஆங்கில பாடம் கற்பிப்பதற்கும் அத்துறைசார் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் 74ஆவது உத்தேச நலன்சார் வேலைத்திட்டத்தின்படி பாடத்துறை சார்ந்த விசேட பாடசாலைகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு குறைபாடான பாட ரீதியான ஆசிரிய நியமனங்கள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேசமயம் தமிழ் மொழி மூலமான பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்தவும் ஆவன செய்யப்படும்.

இலங்கையில் இயங்குகின்ற முஸ்லிம் பாடசாலைகளிலும் பௌதீக வள, மனித வள குறைபாடுகளுடன் இயங்கி வருவதை நானறிவேன். இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்களுடனும் பணிப்பாளர்களுடனும் அந்தந்த மாவட்டத்திற்குச் சென்று கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு செய்துள்ளேன்.

பாடசாலைகளில் பல வருடகாலமாக நிலவும் ஆளணி வெற்றிடங்களுக்கு காவலாளி, தொழிலாளி, ஆய்வுகூட உதவியாளர் போன்ற சிற்றூழியர்களை நியமிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிங்கள மொழிமூல பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து அவற்றை தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum