Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளை பின்பற்றுங்கள் மலையக தலைமைகளுக்கு இராஜதுரை எம்.பி

Go down

வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளை பின்பற்றுங்கள் மலையக தலைமைகளுக்கு இராஜதுரை எம்.பி Empty வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளை பின்பற்றுங்கள் மலையக தலைமைகளுக்கு இராஜதுரை எம்.பி

Post by oviya Thu Jan 22, 2015 1:37 pm

வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தியை முன்னைய அரசு ஆரம்பித்த போதும் அங்குள்ள அரசியல் தலைமைகளும் மக்களும் தங்களின் உரிமைகளுக்கே முன் உரிமை கொடுத்தார்கள் அவர்கள் சிந்திப்பதை போன்று மலையக மக்களும் சிந்திக்க வேண்டும்.

காபட் சாலை போடுவதனால் அபிவிருத்தியை காணமுடியாது மாறாக ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலுடையவனாக மாற வேண்டும் அவனுக்குரிய உரிமைகள் தேவைகள் நிறைவுடையதாக இருக்க வேண்டும்.

அரசியல் ரீதியான உண்மையான நீதியான பங்காளிகளாக மாற வேண்டும் இவ்விடயங்களே அபிவிருத்தி என்று அர்த்தப்படுத்தக்கொள்ள வேண்டும் இவ்வாறு 100 நாள் வேளை திட்டம் சம்பந்தமாக கருத்து தெரிவித்த நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினரும் சட்ட தரணியுமான பி.ராஜதுரை பா.உ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

புதிய அரசாங்கத்தில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது குறிப்பாக இந்த 100 நாள் திட்டத்தில் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் குறித்தே சிந்திக்கப்படுகின்றது.

அரசியல் சட்ட விவகாரங்களை எவ்வாறு நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்றவாறு மாற்றியமைப்பது என்பது குறித்தும் நாட்டின் சமாதான வாழ்வு, நல்லாட்சி சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களை எப்படி நிலைபடுத்துவது என்பவை குறித்துமே சிந்திக்கப்படுகின்றது.

மலையகத்தை பொறுத்தவரை அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை சிந்திக்கவிடாது தடுத்து தொழிற்சங்க வளர்ப்பையே குறிப்பாக கொண்டுள்ளனர் மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் இன்றைய மலையக சமுதாயமாக வளர்ச்சி கண்டுள்ளது. ஆகவே எமது மூதாதையர்களை ஏமாற்றியது போல் இன்றைய இளைய சமுதாயத்தை ஏமாற்ற முடியாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றில் முன்வைக்கப்பட வேண்டும் அவை பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் அது சம்பந்தமான விவாதங்களை நடைபெற வேண்டும் அதன் மூலமே தீர்வு பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும் அதனை விடுத்து இனி மேலும் தனிப்பட்ட சுகபோகங்களுக்கும் சுய நலனுக்காகவும் மக்களின் பிரச்சினைகளை மூடி மறைக்க கூடாது. அதன் மூலம் பிழைப்பு நடத்தும் எண்ணம் ஒழியவேண்டும்.

அரசியல் வாதிகளாக வெளிப்படுபவர்கள் அதன் கௌரவத்தை பாதுகாத்து மேலும் அரசாங்க புதிய கொள்ளை திட்டங்களில் மலையக மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளை தெரிவாகும் விடயத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். இந்த விடயங்களில் மலையக தலைமைகள் மிகவும் அவதானத்துடன் செயல்பட்டு தொகுதி உறுப்பினர் உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum