Top posting users this month
No user |
தமிழர் தேசம் சுதந்திரம் பெறும்வரை கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை ஏற்காது : பா.அரியநேத்திரன் பா.உ
Page 1 of 1
தமிழர் தேசம் சுதந்திரம் பெறும்வரை கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை ஏற்காது : பா.அரியநேத்திரன் பா.உ
65வருடமாக நாங்கள் போராடிக்கொண்டுள்ள சுதந்திரத்தினை பெறவேண்டும்.அந்த அபிலாசையை அடையவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அமைச்சுப்பதவிகளை பெறவில்லை.
மட்டக்களப்பு,பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் குடமுழுக்கு கும்பாபிசேகத்தினை சிறப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “முத்துவிநாயகர் வித்தகம்” நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நூழானது தமிழர்களின் வரலாற்றினை எடுத்துக்கூறும் முக்கிய நூலாக உருவாக்கப்பட்டுள்ளது.
விஸ்வப்பிரம்ம ஸ்ரீகாந்தன் குருக்களினால் இந்நூல் உருவாக்கப்பட்டு வெளியிட்டுவைக்கப்பட்டது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அனைத்து மதங்கள் தொடர்பான அறிவையும் கொண்டுள்ள ஒரு மதகுருவாக நான் விஸ்வப்பிரம்ம ஸ்ரீ காந்தன்குருக்கள் அவர்களை கருதுகிறேன்.
மற்றைய மதம் தொடர்பாக அவர் போன்ற அறிவினைக்கொண்டவர்கள் வேறு யாரும் இங்கு இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. இது மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் உயர்ந்த பெருமையினை தந்துள்ளது.
ஒரு இனம் வாழவேண்டுமாகவிருந்தால் அதன் நிலம் விடுதலைபெற்றதாக இருக்கவேண்டும். நாங்கள் தமிழர்களாக இருப்போமானால் நாங்கள் வாழும் இனம், வாழும் நிலம், நாங்கள் வாழும் சூழலை நாங்கள் மதிக்கவேண்டும்.
அதனை நாம் மதிக்கும்போதே மற்ற இனங்களுடன் நாங்கள் சமத்துவமாக வாழமுடியும்.அந்த வழிமுறையில்தான் காந்தன் குருக்கள் பலவற்றினை தொட்டுச்சென்றுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்த உங்கள் உறவினரான சண்.தவராஜா அவர்களைப்பற்றியும் இங்கு கூறமுடியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆரம்பிப்பதில் காரண கர்த்தாவாக உங்கள் சமூகத்தினை சேர்ந்தவரும் பங்காற்றியுள்ளதார் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.இன்று புலம்பெயர்ந்துள்ளபோதிலும் இன்னும் தமிழ் தேசியத்தில் பற்றுடன் அவர் இருந்துவருகின்றார்.
அகிம்சை போராட்டம்,ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஐந்து வருடங்கள் போரற்ற சூழ்நிலையில் நாங்கள் வாழ்ந்துள்ளோம். அதனை பலர் சமாதானம் என்று கூறியதை நீங்கள் அறிவீர்கள்.
போர்முடிந்தாலும் கூட சமாதானம் அற்ற நிலையிலேயே நாங்கள் இருந்துகொண்டுள்ளோம். ஆனால் நிலையான சமாதானம் வேண்டும்,நிலைத்து நிற்கும் அரசியல் தீர்வுத்திட்டம்வேண்டும், நாங்கள் பலரை இழந்துள்ளோம்,பல இன்னல்களை எதிர்கொண்டோம் என்பதற்காகத்தான் மாற்றத்தினை வேண்டி பகிரங்கமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.
இப்போதும் நாங்கள் பெறமாட்டோம்.இனியும் பெறும் எண்ணமும் எமக்கு இல்லை என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அந்த மாற்றம் இன்று வந்துள்ளது. யார் ஆட்சிக்கு வருவார் என்பது அல்ல எங்கள் பிரச்சினை.அராஜக ஆட்சியை வடகிழக்கில் இருந்து ஒழிக்கவேண்டும் என்ற செய்தியை நாங்கள் வழங்கியிருந்தோம்.அந்த ஆட்சிமாற்றம் வடக்கு கிழக்கு மக்களின் அதிகப்படியான வாக்குகள் மூலம் வந்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது 100நாள் நாட்குறிப்பில் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் அமைச்சு பதவியினை எடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பில் உள்ள பல்வேறுபட்ட புத்திஜீவிகள்,சமூகப்பெரியார்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். நூறுநாள் காலத்தில் வழங்கப்படும் அமைச்சுப்பதவிகளைக்கொண்டு எந்த பணியையும் ஆற்றமுடியாது.
அடுத்து நாங்கள் அமைச்சுப்பதவியை எடுக்கவேண்டுமாகவிருந்தல் கடந்த அரசாங்கதிலேயே பல அமைச்சுப்பதவிகளை பெற்றிருப்போம்.நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல.அது அல்ல எங்கள் பிரச்சினை. 65வருடமாக நாங்கள் போராடிக்கொண்டுள்ள சுதந்திரத்தினை பெறவேண்டும்.
அந்த அபிலாசையை அடையவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அமைச்சுப்பதவிகளை பெறவில்லை. இப்போதும் நாங்கள் பெறமாட்டோம்.இனியும் பெறும் எண்ணமும் எமக்கு இல்லை. மக்களாகிய நாம் ஒன்றில் விழிப்பாக இருக்கவேண்டும் .
எமது இனம் தொடர்ச்சியாக எமது பண்பாடுகள்,பாரம்பரியங்களுடன் வாழவேண்டுமாகவிருந்தால் எமது சந்ததியை பெருக்கி ஒரு விடுதலைபெற்ற சமூகமாக வாழவேண்டுமாகவிருந்தால் எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு இல்லாத பூமியில் நாங்கள் வாழவேண்டுமாகவிருந்தால் நிரந்தரமான அரசியல் எமக்கு இருக்கவேண்டும்.
அந்த நிரந்தரமான அரசியலை செய்யக்கூடிய சக்தி யார் என்பதை மக்கள் இனம் காணவேண்டும்.அந்த இலக்கினைக்கொண்ட ஒரேயொரு கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை நாங்கள் ஜனாநாயக ரீதியாக பலப்படுத்தினால் மட்டுமே எமது இனத்தினையும்,எமது பண்பாடுகளையும் எமது நிலத்தினையும் தக்கவைத்துக்கொள்ளமுடியும்.
ஆன்மீக பலத்தினால் அரசியல் பலத்தினை வீழ்த்த முடியும்.அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.அதுதான் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளது.இந்த ஆன்மீக பலத்தினை தொடர்ந்து தக்கவைக்கவேண்டுமாகவிருந்தால் அதனை தக்கவைப்பதற்கான அரசியல் பலம் எங்களுக்கு தேவையாக இருக்கின்றது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறும் தேர்தலுக்கு பின்னரே அனைத்து விடயங்களும் நடைபெறவிருக்கின்றது.நாங்கள் எமது இனம்,மக்கள் சார்ந்த கட்சியினை நாங்கள் பலப்படுத்தவேண்டும்.
இனம் சார்ந்த விடயங்களை நாங்கள் அரசியலில் பலப்படுத்தும்போதே மொழிசார்ந்த ஆன்மீகம் சார்ந்த வளங்களை மேம்படுத்தமுடியும்.
மட்டக்களப்பு,பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் குடமுழுக்கு கும்பாபிசேகத்தினை சிறப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “முத்துவிநாயகர் வித்தகம்” நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நூழானது தமிழர்களின் வரலாற்றினை எடுத்துக்கூறும் முக்கிய நூலாக உருவாக்கப்பட்டுள்ளது.
விஸ்வப்பிரம்ம ஸ்ரீகாந்தன் குருக்களினால் இந்நூல் உருவாக்கப்பட்டு வெளியிட்டுவைக்கப்பட்டது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அனைத்து மதங்கள் தொடர்பான அறிவையும் கொண்டுள்ள ஒரு மதகுருவாக நான் விஸ்வப்பிரம்ம ஸ்ரீ காந்தன்குருக்கள் அவர்களை கருதுகிறேன்.
மற்றைய மதம் தொடர்பாக அவர் போன்ற அறிவினைக்கொண்டவர்கள் வேறு யாரும் இங்கு இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. இது மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் உயர்ந்த பெருமையினை தந்துள்ளது.
ஒரு இனம் வாழவேண்டுமாகவிருந்தால் அதன் நிலம் விடுதலைபெற்றதாக இருக்கவேண்டும். நாங்கள் தமிழர்களாக இருப்போமானால் நாங்கள் வாழும் இனம், வாழும் நிலம், நாங்கள் வாழும் சூழலை நாங்கள் மதிக்கவேண்டும்.
அதனை நாம் மதிக்கும்போதே மற்ற இனங்களுடன் நாங்கள் சமத்துவமாக வாழமுடியும்.அந்த வழிமுறையில்தான் காந்தன் குருக்கள் பலவற்றினை தொட்டுச்சென்றுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்த உங்கள் உறவினரான சண்.தவராஜா அவர்களைப்பற்றியும் இங்கு கூறமுடியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆரம்பிப்பதில் காரண கர்த்தாவாக உங்கள் சமூகத்தினை சேர்ந்தவரும் பங்காற்றியுள்ளதார் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.இன்று புலம்பெயர்ந்துள்ளபோதிலும் இன்னும் தமிழ் தேசியத்தில் பற்றுடன் அவர் இருந்துவருகின்றார்.
அகிம்சை போராட்டம்,ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஐந்து வருடங்கள் போரற்ற சூழ்நிலையில் நாங்கள் வாழ்ந்துள்ளோம். அதனை பலர் சமாதானம் என்று கூறியதை நீங்கள் அறிவீர்கள்.
போர்முடிந்தாலும் கூட சமாதானம் அற்ற நிலையிலேயே நாங்கள் இருந்துகொண்டுள்ளோம். ஆனால் நிலையான சமாதானம் வேண்டும்,நிலைத்து நிற்கும் அரசியல் தீர்வுத்திட்டம்வேண்டும், நாங்கள் பலரை இழந்துள்ளோம்,பல இன்னல்களை எதிர்கொண்டோம் என்பதற்காகத்தான் மாற்றத்தினை வேண்டி பகிரங்கமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.
இப்போதும் நாங்கள் பெறமாட்டோம்.இனியும் பெறும் எண்ணமும் எமக்கு இல்லை என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அந்த மாற்றம் இன்று வந்துள்ளது. யார் ஆட்சிக்கு வருவார் என்பது அல்ல எங்கள் பிரச்சினை.அராஜக ஆட்சியை வடகிழக்கில் இருந்து ஒழிக்கவேண்டும் என்ற செய்தியை நாங்கள் வழங்கியிருந்தோம்.அந்த ஆட்சிமாற்றம் வடக்கு கிழக்கு மக்களின் அதிகப்படியான வாக்குகள் மூலம் வந்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது 100நாள் நாட்குறிப்பில் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் அமைச்சு பதவியினை எடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பில் உள்ள பல்வேறுபட்ட புத்திஜீவிகள்,சமூகப்பெரியார்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். நூறுநாள் காலத்தில் வழங்கப்படும் அமைச்சுப்பதவிகளைக்கொண்டு எந்த பணியையும் ஆற்றமுடியாது.
அடுத்து நாங்கள் அமைச்சுப்பதவியை எடுக்கவேண்டுமாகவிருந்தல் கடந்த அரசாங்கதிலேயே பல அமைச்சுப்பதவிகளை பெற்றிருப்போம்.நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல.அது அல்ல எங்கள் பிரச்சினை. 65வருடமாக நாங்கள் போராடிக்கொண்டுள்ள சுதந்திரத்தினை பெறவேண்டும்.
அந்த அபிலாசையை அடையவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அமைச்சுப்பதவிகளை பெறவில்லை. இப்போதும் நாங்கள் பெறமாட்டோம்.இனியும் பெறும் எண்ணமும் எமக்கு இல்லை. மக்களாகிய நாம் ஒன்றில் விழிப்பாக இருக்கவேண்டும் .
எமது இனம் தொடர்ச்சியாக எமது பண்பாடுகள்,பாரம்பரியங்களுடன் வாழவேண்டுமாகவிருந்தால் எமது சந்ததியை பெருக்கி ஒரு விடுதலைபெற்ற சமூகமாக வாழவேண்டுமாகவிருந்தால் எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு இல்லாத பூமியில் நாங்கள் வாழவேண்டுமாகவிருந்தால் நிரந்தரமான அரசியல் எமக்கு இருக்கவேண்டும்.
அந்த நிரந்தரமான அரசியலை செய்யக்கூடிய சக்தி யார் என்பதை மக்கள் இனம் காணவேண்டும்.அந்த இலக்கினைக்கொண்ட ஒரேயொரு கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை நாங்கள் ஜனாநாயக ரீதியாக பலப்படுத்தினால் மட்டுமே எமது இனத்தினையும்,எமது பண்பாடுகளையும் எமது நிலத்தினையும் தக்கவைத்துக்கொள்ளமுடியும்.
ஆன்மீக பலத்தினால் அரசியல் பலத்தினை வீழ்த்த முடியும்.அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.அதுதான் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளது.இந்த ஆன்மீக பலத்தினை தொடர்ந்து தக்கவைக்கவேண்டுமாகவிருந்தால் அதனை தக்கவைப்பதற்கான அரசியல் பலம் எங்களுக்கு தேவையாக இருக்கின்றது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறும் தேர்தலுக்கு பின்னரே அனைத்து விடயங்களும் நடைபெறவிருக்கின்றது.நாங்கள் எமது இனம்,மக்கள் சார்ந்த கட்சியினை நாங்கள் பலப்படுத்தவேண்டும்.
இனம் சார்ந்த விடயங்களை நாங்கள் அரசியலில் பலப்படுத்தும்போதே மொழிசார்ந்த ஆன்மீகம் சார்ந்த வளங்களை மேம்படுத்தமுடியும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum