Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதி தேர்தல் சதித் திட்டம் குறித்து புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பம்

Go down

ஜனாதிபதி தேர்தல் சதித் திட்டம் குறித்து புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பம் Empty ஜனாதிபதி தேர்தல் சதித் திட்டம் குறித்து புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பம்

Post by oviya Thu Jan 15, 2015 1:18 pm

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற கடந்த 8ம் திகதி இரவு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதனை தடுப்பதற்கு சூழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
தேர்தல் நடைபெற்ற தினமன்று இரவு சட்டத்துறையைச் சேர்ந்த இரண்டு பிரதானிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தா்கள் ஒரு இடத்தில் கூடி ஆராய்ந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை ரத்து செய்து நாடு முழுவதிலும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி முன்னைய அரசாங்கத்தை, தேர்தல் தோல்வியிலிருந்து பாதுகாக்க வேண்டுமென சட்டத்துறைசார் பிரதானி ஒருவர் யோசனை முன்வைத்துள்ளார்.

இந்த யோசனையை சட்டத்துறைசார் மற்றைய பிரதானியும், பொலிஸ்மா அதிபரும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

எதிர்ப்பு கிளம்பியமை காரணமாக இந்த சதித் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இராணுவ சூழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுக்க முயற்சித்தனர் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலனாய்வுப் பிரிவினரிடம் நேற்று முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவியை காப்பாற்ற பிரதம நிதியரசர் மொஹான் பிரிஸூம் சில பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சட்டமா அதிபரும் பொலிஸ்மா அதிபரும் இந்த திட்டத்திற்கு இணங்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சரின் முறைப்பாட்டுக்கு அமைய சம்பவம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்தி

மகிந்த, கோத்தா, மேலும் இருவருக்கு எதிராக மங்கள சமரவீர முறைப்பாடு
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum