Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய திருநாட்டின் எதிர்கால தூண்களே…சற்று சிந்தியுங்கள்

Go down

இந்திய திருநாட்டின் எதிர்கால தூண்களே…சற்று சிந்தியுங்கள் Empty இந்திய திருநாட்டின் எதிர்கால தூண்களே…சற்று சிந்தியுங்கள்

Post by oviya Mon Jan 12, 2015 1:30 pm

இன்றைய இளைஞர்களே நாளை எதிர்காலம், இளைஞர்களின் வளர்ச்சியை பொறுத்தே ஒரு நாட்டின் வளர்ச்சி இருக்கும்.
சுவாமி விவோகானந்தரின் பிறந்தநாளையே இந்தியாவில் இளைஞர்கள் தினமாக கொண்டாடுகிறோம்.

இளம் வயதிலேயே துறவியான இவர், அன்றைய இந்திய இளைஞர்களுக்கு மட்டுமின்றி, இன்றைய இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார்.

ஒரு இளைஞன் எப்படி இருந்தால், அவன் வாழும் நாடு முன்னேறும் என்பது குறித்து விவேகானந்தர் வாய்களிலிருந்து வெளியான வார்த்தைகளை இன்றைய இளைஞர்கள் கடைபிடித்தாலே போதும், ஒவ்வொரு நாடும் வளர்ச்சியில் உச்சத்தை தொடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும் என்றார்.

சாதனைகள்

இன்றைய இளைஞர்கள் சாதிக்காத துறை என்னதான் இருக்கிறது, பூமி தொடங்கி ஆகாயம் வரை கால்பதித்து தங்களது சாதனைகளை படைத்து வருகிறார்கள்.

தொழில்நுட்பம், வணிகம், ஆராய்சி என பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள இவர்கள் அரசியலில் இன்னும் காலுண்டவில்லை.

இந்தியாவில் அரசியல் ரீதியாக இளைஞர்களுக்கு பின்னடைவுதான், மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கலாம்,

இன்றைய அரசியலில் ஆளுமை திறன் மேலோங்கியிருக்கிறதோ இல்லையோ, ஊழலே அரசியலை ஆண்டு வருகிறது, அப்படியிருக்கையில் இளைஞர்கள் கையில் அரசியலை கொடுத்தால் அவர்கள் ஊழலை கற்றுக்கொள்ளவதற்கு முன்னதாகவே, நாட்டை ஆளும் திறனை கற்றுக்கொள்ளவார்கள்.

மற்ற துறைகளில் சாதனை படைக்கும் அவர்கள், அரசியலிலும் சாதனை படைத்துதான் பார்க்கட்டுமே.

சோதனைகள்

இப்படி ஒருபுறமிருக்க, இன்றைய இளைஞர்களால் சமுதாயம் பெரும்பாலான இன்னல்களை சந்தித்து வருகிறது.

குடி, புகையிலை, திருட்டு, பலாத்காரம் என எண்ணிடலங்கா இன்னல்கள்.

நாட்டின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பகுதியிலும் சமுதாயத்தை பாதிக்கும் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

இதற்கெல்லாம் குற்றவாளிகள் யார் என்று பார்த்தால் பெரும்பாலானோர் இளைஞர்களாகவே இருப்பர்.

இப்படி இருந்தால், எவ்வாறு இவர்கள் நாளைய சமுதாயமாக இருப்பார்கள், இவர்கள் இப்படி இருந்தால் சமுதாயத்தின் வளர்ச்சி இருக்கும்.

ஆகவே, இளைஞர்கள் தினமான இன்று ஒவ்வொரு இளைஞனும் இந்நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் வழிகோலுவதே சிறந்ததாகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum